முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹஜ் பயணத்திற்கு சென்னையில் 21-ல் தேதி குலுக்கல்

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014      ஆன்மிகம்
Image Unavailable


சென்னை ஏப். 17 - 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனுஅளித்துள்ளனர். இந்த ஹஜ் பயணத்திற்கு சென்னையில் 21_ம் தேதி குலுக்கல் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு முதன்மை செயலாளர் அருள்மொழி  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:_
ஹஞுஞு 2014_ற்காக சுமார் 13,000+ க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் புனிதப் பயணிகளிடமிருந்து தமிழ் நாடு மாநில ஹஞுஞு குழுவால் பெறப்பட்டுள்ளன.  எனவே, புனிதப் பயணிகளை குலுக்கல் முறை மூலம் (குறா) தெரிவு செய்யுமாறு மும்பை, இந்திய ஹஞுஞு குழு, மாநில ஹஞுஞு குழுவை கேட்டுக் கொண்டுள்ளது மும்பை, இந்திய ஹஞுஞு குழு கேட்டுக் கொண்டபடி ஹஞு 2014_ற்கான புனிதப் பயணிகளைத் தெரிவு செய்ய குலுக்கலை (குறா) நடத்த தமிழ் நாடு மாநில ஹஞுஞு குழு முடிவு செய்துள்ளது.  இந்தக் குலுக்கல் நிகழ்ச்சி 21_04_2014 (திங்கட்கிழமை) அன்று காலை 11.30 மணியளவில் சென்னை, இராயப்பேட்டை, புதுக்கல்லூரியிலுள்ள, ஆனைக்கார் அப்துல் சுக்கூர் அரங்கத்தில் நடைபெறும். ஹஞுஞு 2014_ற்காக, தமிழ் நாடு மாநில ஹஞுஞு குழு மூலமாக விண்ணப்பித்துள்ள புனிதப் பயணிகள் இக்குலுக்கலில் (குறாவில்) கலந்து கொண்டு நிகழ்ச்சியினை அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடத்திட ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அரசு முதன்மை செயலாளர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்