முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் மோடி அலை வீசவில்லை: நக்மா பிரச்சாரம்

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014      சினிமா
Image Unavailable


மீரட், ஏப் 17 - பாஜக கூறுவது போல் நாட்டில் எங்குமே மோடி அலை  வீசவில்லை என்று நடிகை நக்மா கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மக்களவை தொகுதியில் நடிகை நக்மா போட்டியிடுகிறார். அவர் இந்தூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சத்யநாராயணனை ஆதரித்து நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது,
நாட்டில் எங்கும் மோடி அலை வீசவில்லை. மோடி தனக்கு மிகவும் சாதகமான தொகுதியை தான் தேர்வு செய்துள்ளார். வாரணாசி தொகுதியில் பாஜக நல்ல நிலைமையில் உள்ளதால் அந்த தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி நாடெங்கும் மோடி அலை வீசுகிறது என்று கூறுவதில் பொருள் இல்லை. என்னை போல கட்சியின் பலம் இல்லாத தொகுதியை அவர் தேர்வு செய்திருக்க வேண்டும்.
மத்திய பிரதேசமும் குஜராத்தும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்வதில் முன்னிலை வகிக்கின்றன. மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் ஆட்சியில் 4 வயது குழந்தை கூட பலாத்காரத்தால் பாதிக்கப்படுகிறது. ஊழலுக்கும் இந்த மாநிலம் குறைந்தது அல்ல. சுரங்க ஊழல், முதியோர் ஓய்வூதியம், நில அபகரிப்பு, போட்டி தேர்வு முறைகேடு என அனைத்து விதமான ஊழல்களும் இங்கு நடந்துள்ளன. போட்டி தேர்வு முறைகேட்டால் 75 லட்சம் குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக மத்திய பிரதேச அரசு ஏன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவில்லை.
எதிர்வரும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் அரசு சிபிஐ மூலம் விசாரணையை மேற்கொண்டு உண்மைகளை வெளியே கொண்டு வரும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்