முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்., அரசு அனைத்து துறையிலும் ஊழல்: சரத்குமார் பேச்சு

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014      சினிமா
Image Unavailable

 

நெல்லை,ஏப்.20 - மத்திய காங்கிரஸ் அரசு எந்த துறையையும் விட்டு வைக்காமல் அனைத்து துறையிலும் ஊழல் செய்துள்ளது என்று நெல்லையில் பிரசாரத்தில் ச.ம.க.நிறுவனத்தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ.பேசினார்.

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வக்கீல் பிரபாகரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்த நிலையில் அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் நேற்று அக்கட்சியின் நிறுவனத்தலைவர் சரத்குமார் நெல்லையை அடுத்த பேட்டையில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார் 

பேட்டை பகுதியில் சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் சரத்குமார் பிரசாரம் செய்து பேசியதாவது:-

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் இந்தியாவின் பொருளாதாரம் பின்தங்கி விட்டது இந்நேரத்தில் இத்தேர்தல் மிக முக்கியமானதாகும். மத்திய காங்கிரஸ் அரசு எந்த துறையையும் விட்டு வைக்காமல் அனைத்து துறையிலும் ஊழல் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 26-ந் தேதி முதல் பல்வேறு பாராளுமன்ற தொகுதிகளுக்குச் சென்று பிரசாரம் செய்து வருகிறேன். நான் சென்ற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் எழுச்சியாக வரவேற்பு அளித்து வருகிறார்கள். மக்கள் அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப்போட தயாராகிவிட்டனர். முதல்வர் ஜெயலலிதா அறிவித்த 177 வாக்குறுதிகளில் 33 மாத கால ஆட்சியில் 150 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத சலுகைகளையும் வழங்கி உள்ளார். மத்திய அரசில் 14 ஆண்டுகள் தொடர்ந்து அங்கம் வகித்த தி.மு.க. தமிழ்நாட்டுக்கு என்ன நன்மைகள் செய்துள்ளது? ஈழத் தமிழர்கள் படுகொலையின் போது மத்திய அரசில் இருந்து கொண்டு தி.மு.க. அதனை வேடிக்கை பார்த்தது. பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. கட்சிகள் அமைத்து இருப்பது கொள்கை இல்லாத கூட்டணி. தே.மு.தி.க.வுக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் 29 தொகுதிகளை பெற்றுக் கொடுத்ததுடன் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தையும் விஜயகாந்துக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

ஆனால் கூட்டணி தர்மத்தை மதிக்காமல் வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து இருக்கிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வே வெல்லும் இது உறுதி. இவ்வாறு அவர் பேசினார். 

பிரசாரத்தில் மாநில துணை தலைவரும் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான எர்ணாவூர் நாராயணன், நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முத்துகருப்பன் எம்.பி., முன்னாள் அமைச்சர் நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ஜெகநாதன், நிர்வாகிகள் தச்சைஎன்.கணேசராஜா, பரணிசங்கரலிங்கம், சுதாகே.பரமசிவன், மோகன், மாதவன், ஜோதிபரமசிவன், பால்கண்ணன், பாளைகே.சரவணன், கணபதிசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து சுத்தமல்லி, பேயன்குளம், பணகுடி என நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சரத்குமார் எம்.எல்.ஏ.பிரசாரம் செய்தார்.

 

படவிளக்கம் (001)

நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் கே.ஆர்.பி.பிரபாகரனை ஆதரித்து ச.ம.க.நிறுவனத்தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ.பிரசாரம் செய்து பேசியபோது எடுத்தப்படம். உடன் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் முத்துகருப்பன் எம்.பி., முன்னாள் அமைச்சர் நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ., ச.ம.க.எம்.எல்.ஏ.எர்ணாவூர் நாராயணன் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்