முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க. - பா.ம.க. மீது பண்ருட்டி ராமச்சந்திரன் தாக்கு

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

கோபி, ஏப்.20 - தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள்  நேற்று முளைத்த காளான்கள் என்று பண்ருட்டி  ராமச்சந்திரன் பேசினார். கோபியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து அவர் பேசியதாவது:

இந்தியாவில் கடந்த 67 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி செய்து வந்தது. ஆனால் வளர்ச்சி ஏற்படவில்லை. தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள்  நேற்று முளைத்த காளான்கள். ராகுல் காந்திக்கு நிர்வாக அனுபவம் இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் கோடீஸ்வரர்களின்  எண்ணிக்கை 12 மடங்கு அதிகரித்துள்ளது.

சாதாரண மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சி 7.5 சதவீதம் என்று சோனியா காந்தி பேசியுள்ளார். 2003-ம் ஆண்டு இந்தியாவில் உலக பணக்காரர்கள் வரிசையில் 23 பேர் இருந்தனர். தற்போது இது 79 ஆக உயர்ந்துள்ளது. பணக்காரர்கள் மட்டுமே அதிகரித் துள்ளனர். உலகில் உள்ள ஏழைகளி்ல் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளனர் என்றார்.           

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்