முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் அஜய்ரத்தினம் மனைவியுடன் அ.தி.மு.க.வில் இணைந்தார்

திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்.22 - முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நேற்று நடிகர் அஜய்ரத்தினம் மற்றும் அவரது மனைவி அ.தி.மு.க.வில் இணைந்தனர். மேலும் கிராம கோயில் பூசாரிகளும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:_

வருகின்ற 24.4.2014 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை நேற்று கிராம கோயில் பூசாரிகள் பேரவை; பூ கட்டுவோர் பேரவை; அருள் வாக்கு அருள்வோர் பேரவை கூட்டமைப்பின் நிர்வாக அறங்காவலர் எஸ். வேதாந்தம், 

கிராம கோயில் பூசாரிகள் பேரவையின் மாநில அமைப்பாளர் எஸ். ராஜா, பூ கட்டுவோர் பேரவையின் மாநில அமைப்பாளர் துரை. ரமேஷ், அருள் வாக்கு அருள்வோர் பேரவையைச் சேர்ந்த முனியம்மாள் உள்ளிட்டோரும்;  

விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் குடந்தை அரசன், மாநில அமைப்புச் செயலாளர் ச. அருண் மாசிலாமணி, தலைமை நிலையச் செயலாளர்களான இரா. வினோத்குமார், அலெக்சாண்டர் உள்ளிட்டோரும் 

நேரில் சந்தித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்தார்கள்.

அதற்கு,  அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தமது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

அனைத்திந்திய  அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை நேற்று நடிகர் அஜய் ரத்னம் மற்றும் அவருடைய மனைவி சத்யஸ்ரீ ஆகியோர் நேரில் சந்தித்து, தங்களை கழத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்