எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப். 23 - தமிழகத்தில் உச்சகட்ட பிரச்சாரம் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. பிரச்சாரம் ஓய்ந்துள்ள நிலையில் தேர்தல் ஆணையமும் ஒரு உச்ச கட்ட நடவடிக்கையை எடுத்து அரசியல் கட்சிகளை மிரள வைத்துள்ளது. அது தான் 144 தடையுத்தரவு.
அதிமுக பொதுசெயலாளரான ஜெயலலிதா நேற்று முன்தினமே தனது பிரச்சாரத்தை நிறைவு செய்துவிட்டார். திமுக தலைவர் கருணாநிதி மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட சேப்பாக்கம் தொகுதியில் நேற்று மாலை தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
பிரச்சாரம் ஓய்ந்துள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவுஅமலுக்கு வந்தது.இது 24_ந்தேதி காலை 6 மணி வரை 36 மணி நேரத்துக்கு நீடிக்கும்என்று தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியுள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:_
தமிழ்நாட்டில் நாளை (24_ந்தேதி) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கும். தேர்தலில் வாக்களிக்க வருபவர்கள் வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 ஆவணங்களை காட்டி ஓட்டு போடலாம்.
அவை 1.பாஸ்போர்ட், 2.டிரைவிங் லைசென்ஸ், 3.பொதுத்துறை_மத்திய, மாநில அரசுகள் பணியாளர்களின் அடையாள அட்டை, 4.வங்கி புத்தகம் மற்றும் அஞ்சலக கணக்கு புத்தகம் (அனைத்தும் போட்டோவுடன் இருக்க வேண்டும்). 5.பான்கார்டு, 6.ஆதார் அடையாள அட்டை, 7.தேசிய மக்கள் கணக்கெடுப்பு அட்டை, 8.தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை, 9.தொழிலாளர் துறை வழங்கிய அட்டை, 10.பென்சன் அட்டை, 11.போட்டோவுடன் கூடிய தேர்தல் கமிஷன் வழங்கிய பூத்_சிலிப்.
இந்த 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி ஓட்டு போடலாம்.
கடந்த தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை, பூத் சிலிப் ஆகியவற்றை காட்டி ஓட்டுபோட அனுமதித்தோம். இந்த தேர்தலில் 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம். ஆனால் ரேசன் கார்டை காட்டி ஓட்டுபோட இயலாது.
அரசியல் கட்சிகள் தரும் பூத்_சிலிப்பை ஓட்டுச்சாவடிக்கு கொண்டு வரலாம். அதில் கட்சி சின்னம் இருக்கக்கூடாது. அரசியல் கட்சிகள் தரும் பூத்_சிலிப்பை வைத்து ஓட்டுச்சீட்டு நம்பரை சரிபார்க்கலாம். ஆனால் அதை வைத்து உரிமை கோர முடியாது.
ஓட்டுச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்குள் மது போதையில் யார் சுற்றினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. என்றாலும் சிலர் ஓட்டுப்பதிவு தினத்தன்று போதையில் நடமாடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் முதன் முறையாக இன்று (நேற்று)மாலை 6 மணி முதல் தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இது 24_ந்தேதி காலை 6 மணி வரை 36 மணி நேரத்துக்கு நீடிக்கும். இதுபற்றி அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் கமிஷனர்கள், சூப்பிரண்டுகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். எனவே இன்று (நேற்று) மாலை முதல் 24_ந்தேதி காலை 6 மணி வரை 5 பேர் அல்லது அதற்கு மேல் எண்ணிக்கையில் சேர்ந்து செல்லக்கூடாது. 4 பேர் செல்லலாம்.
இன்று (நேற்று)மாலை 6 மணியுடன் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும். தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தங்கி இருந்தால் வெளியேற வேண்டும். திருமண மண்டபங்களில் கும்பலாக தங்கி இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
பணப்பட்டுவாடா பற்றி நிறைய புகார்கள் வருகிறது. இதைத் தடுக்க ஏற்கனவே 2 ஆயிரம் குழுக்கள் உள்ளது. தற்போது மேலும் 5 ஆயிரம் குழுக்கள் அமைத்து பணப் பட்டுவாடா நடக்கிறதா என்று கண்காணிக்கிறோம். நேற்று நடந்த சோதனையில் திருவண்ணாமலையில் ரூ.94 லட்சம், நாமக்கல்லில் ரூ.1 லட்சமும் பூத்_சிலிப்புடன் பிடிபட்டுள்ளது.
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை நிலை ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் உள்பட 1 லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் தயார் நிலையில் உள்ளனர். 2.93 லட்சம் அதிகாரிகளும், ஊழியர்களும் தேர்தல் பணியில் <ஈடுபடுத்தப்படுவார்கள். இன்றே அவர்கள் மின்னணு எந்திரங்களுடன் ஓட்டுச் சாவடிக்கு சென்று விடுவார்கள்.
தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் பணபட்டுவாடாவை தடுக்க தீவிர கண்காணிப்பு நடந்து வருகிறது. இதுவரை கணக்கில் வராத ரூ.51 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஓட்டுச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. 100 சதவீதம் வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என்பதே எங்களது இலக்காகும். ஓட்டுப்பதிவு நாளன்று பகல் நேர சினிமா காட்சிகளை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை வந்தது. ஆனால் சினிமா காட்சிகளை ரத்து செய்ய சட்டத்தில் இடம் இல்லை.
வாக்காளர்கள் நாளை மறுநாள் மாலை 6 மணி வரை வாக்கு அளிக்கலாம். மாலை 6 மணிக்குள் வருபவர்களுக்கு கடைசி நேரத்தில் டோக்கன் கொடுக்கப்படும். அவர்கள் வரிசையில் நின்று எவ்வளவு நேரம் ஆனாலும் வாக்கு அளித்து விட்டு செல்லலாம். 6 மணிக்கு பிறகு வருபவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்18 hours 39 sec ago |
பெப்பர் சிக்கன்4 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 18 hours ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
சிவகாசியில் விஜயகாந்த் மகனை ஆதரித்து எடப்பாடி இன்று பிரச்சாரம்
27 Mar 2024சிவகாசி : பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.