முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி மீது வேணி பிரசாத் வர்மா திடுகிடும் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

லக்னோ,ஏப்.23 - தன் 18 வயதில் கொலை செய்து விட்டு நரேந்திர மோடி வீட்டை விட்டு ஓடியவர்   என மத்திய அமைச்சர் வேணி பிரசாத் வர்மா குற்றம்சாட்டியுள்ளார்.

நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் அமைப்பின் மிகப்பெரிய அடியாள் எனக் கூறியதற்காக வேணி பிரசாத் வர்மா மீது ஏற்கெனவே வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் லக்னௌவில் பிரச்சாரம் செய்த வேணி பிரசாத், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 18 வயதில் கொலையைச் செய்து விட்டு வீட்டை விட்டு ஓடி வந்து விட்டார் எனத் தெரிவித்தார்.

இதற்கு பாஜக கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் இது தொடர்பாகக் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் மிகக் கீழ்த்தரமாகப் போய்விட்டது. ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்தின் போதும் வேணி பிரசாத் வர்மா தொடர்ந்து தவறிழைத்து வருகிறார். மோடி பற்றிய அவரின் குற்றச்சாட்டு கண்டிக்கத்தக்கது; முற்றிலும் அடிப்படையற்றது. வேணி பிரசாத்தின் இந்தக் கூற்றை காங்கிரஸ் ஆதரிக்கிறதா என அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக காங்கிரஸின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்