முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூர் எண்ணெய் கப்பலை கடத்திய கடல் கொள்ளையர்கள்

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

கோலாலம்பூர், ஏப் 25 - மலேசியா அருகே சிங்கப்பூர் எண்ணெய் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர். 

சிங்கப்பூரில் இருந்து நானிவாமரூ என்ற எண்

ணெய் கப்பல் புறப்பட்டு சென்றது. மேற்கு கடற்கரை பகுதியில் பயணம் செய்தது. அதில் இந்தோனேசியா, தாய்லாந்து, மியான்மர் மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள் இருந்தனர். மலேக்கா ஜலசந்தி சென்ற போது கடற்கொள்ளையர்கள் திடீரென சுற்றி வளைத்து எண்ணெய் கப்பல் உள்ளே புகுந்தனர். பின்னர் பயங்கர ஆயுதங்களால் கப்பல் ஊழியர்களை தாக்கி எண்ணெய் கப்பலை கடத்தி சென்றனர். அத்துடன் கப்பலில் பணிபுரிந்த இந்தோனேசியா ஊழியர்களை கடத்தி சென்றனர் என்று கோலாலம்பூரில் உள்ள கடற்கொள்ளையர் தடுப்பு மையம் என்று அறிவித்துள்ளது. ஆனால் அந்த கடற்கொள்ளையர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை. பிணைய தொகை கோரிக்கைகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்