முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் கொள்ளையனுக்கு மரண தண்டனை

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஏப் 25 - அமெரிக்காவில் மிஸ்பூரி பகுதியை சேர்ந்தவர் மில்லியம் ரவுசன். இவன் கடந்த 93 ம் ஆண்டு ஒரு வீட்டில் திருடினான். அப்போது அங்கிருந்த கணவன், மனைவியை கொலை செய்தான். இவனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கோர்ட் அவனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அமெரிக்காவில் விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதை எதிர்த்து கோர்ட்டில் வில்லியம்ஸ் அப்பீல் செய்தான். அதில் விஷ ஊசியின் ரசாயனம் மிகவும் வீரியமானது. அதன்மூலம் உயிரிழக்கும் போது அதிக வேதனையும் கஷ்டமும் ஏற்படும். எனவே விஷ ஊசி மூலம் தண்டனை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும்என்று கோரிக்கை விடுத்திருந்தான். மனுவை விசாரித்த கோர்ட் அதனை நிராகரித்தது. இதையடுத்து அவனுக்கு ரகசியமாக தண்டனை நிறைவேற்றப்பட்டது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்