முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப் பெரியாறு: முதல்வருக்கு சரத்குமார் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.21 - அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தும் பணிகள் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. அணையின் நீர்மட்டம் 142 அடி உயர்வு என்பது சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு நமக்கு கிடைத்த வெற்றியாகும்.

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தொடர் முயற்சிக்கும், தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்னும் உண்மையான அக்கறை உணர்வுக்கும் கிடைத்த வெற்றி என்றே கருதலாம்.

உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடி, நம் மாநிலத்தின் உரிமைக்காக வாதாடி கிடைத்துள்ள வெற்றியின் படி முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்திருப்பது நமது தார்மீக உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றியும், வெகுமதியும் ஆகும்.

இப்படி ஒரு வரலாற்று சாதனைக்கு வழிவகுத்து, தார்மீகக் கடமை ஆற்றியிருக்கும் தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு என் சார்பிலும், சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்