முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவை சேர்ந்த தீவிரவாதி ஆப்கானிஸ்தானில் சுட்டுக் கொலை

திங்கட்கிழமை, 21 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

காபூல், ஜூலை 22 - இந்தியாவை சேர்ந்த தீவிரவாதி அன்வர் பத்கல். இவன் ஆப்கானிஸ்தானில் இயங்கும் அன்சர் உல் தவ்ஹித் உல் ஹிந்த் என்ற தீவிரவாத இயக்கத்தில் இருந்தான். இந்த நிலையில் கடந்த 17ம் தேதி ஆப்கானிஸ்தான் ராணுவத்துடன் நடந்த துப்பாக்கி சண்டையில் இவன் பலியானான்.

ஷோராபக் மாவட்டத்தில் கந்தகாரின் கடை கோடி பகுதியில் பாகிஸ்தான் எல்லையில் சொவோலை என்ற இடத்தில் ராணுவ சோதனை சாவடி உள்ளது. கடந்த 17ம் தேதி நள்ளிரவில் அன்சார் உல் தவ்ஹித் உல் ஹிந்த் தீவிரவாதிகள் 70 பேர் கும்பலாக வந்து இங்கு தாக்குதல் நடத்தினார்கள்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையேயான துப்பாக்கி சண்டை மறுநாள் அதிகாலை வரை நடந்தது. அதில் 15 தீவிரவாதிகள் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரியும் பலியாகினர். பலியான தீவிரவாதிகளில் அன்வர் பத்கலும் ஒருவன். இந்த தகவலை கந்தகார் போலீஸ் தலைமை அதிகாரி ரக்மத்துல்லா அட்ராபி உறுதிப்படுத்தினார். தீவிரவாதிகள் பஞ்சாப், பர்மா மற்றும் செசன்யாவை சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.

பத்கல் உட்பட ஏராளமான இந்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் லஸ்கர் இ தொய்பாவிடம் பயிற்சி பெற்று ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து வன்செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார். அவர்களுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு துறை உதவி செய்வதாகவும் குற்றம் சாட்டினார். அதை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்