எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, ஆக 1- மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள உள்வட்ட சாலையை 4 வழிச்சாலையாக மாற்றியமைக்க ரூ. 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை மாநகராட்சி மாமன்றக்கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மதுரை மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. இதில் ஆணையளார் சி.கதிரவன், துணைமேயர் கு.திரவியம், மண்டலத் தலைவர்கள் பெ. சாலைமுத்து, கே. ராஜபாண்டியன், கே. ஜெயவேல், நிலைக்குழுத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்களை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா நிறைவேற்றினார்.
தீர்மானம் - 1
தமிழக முதல்வர் அம்மா வருங்காலத் தூண்களான இளைய சமுதாயத்தின் சாதனையை உலகறிய செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை வகுத்து குறிப்பாக இளைஞர்கள் பங்கேற்கும் விளையாட்டுத் துறைக்கு அளப்பரிய ஆக்கத்தையும், ஊக்கத்தையும் அளித்து செயல்படுத்தி வருகிறார்கள். இதனையொட்டி கடந்த 2011 டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத்தில் ஒலிம்பிக்கில் தங்கம் பெறும் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு ரூபாய் ஒரு கோடியும், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் பெறும் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு ரூபாய் 50 லட்சமும் வழங்கப்படும் என்று மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்தார்கள். அதன்படி ஸ்காட்லாந்து நாட்டில் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் என்பவர் 77 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றமைக்கு தாயுள்ளத்தோடு தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையை ஊக்குவிக்கும் பொருட்டு சதீஷ் சிவலிங்கம் என்ற விளையாட்டு வீரருக்கு ரூபாய் 50 இலட்சம் நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு இம்மாமன்றம் கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் - 2
தமிழக மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் தமிழக முதல்வர் அம்மா அவர்கள், மதுரை உட்பட ஐந்து மாவட்ட மக்களின் ஜீவாதார பிரச்சனையான முல்லை பெரியாறு அணை பிரச்சனையில், 2002-ம் ஆண்டு முதல் மாபெரும் சட்ட போராட்டம் நடத்தி, அதன்மூலம் 7.5.2014 அன்று உச்சநீதிமன்றத்தில், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை பெற்றுத்தந்து, தொடர்ந்து 3.6.2014 அன்று பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்துகின்ற வகையில் மூவர் குழுவை அமைக்க வலியுறுத்தி, அதனைத் தொடர்ந்து 8.7.2014 அன்று மூவர் குழு அமைக்கப்பட்டு, இதன்மூலம் முல்லை பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், 17.7.2014 அன்று மதகுகள் அடைக்கப்பட்டு, அதன்மூலம் 136 அடியிலிருந்து 142 அடியாக அணை நீர்மட்டத்தை உயர்த்தி, கடந்த 37 ஆண்டுகளாக தீர்க்க முடியாத, தமிழக ஜீவாதார பிரச்சனையை தீர்த்து வைத்து, இதன்மூலம் தென்மாவட்ட மக்களுக்கு மாபெரும் நீதியினை பெற்றுத்தந்த, தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு, இம்மாமன்றக் கூட்டம் மதுரை மாவட்ட மக்களின் சார்பில், பொற்பாதம் பணிந்து கோடான கோடி நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் - 3
வரலாற்று தொன்மைமிக்க முச்சங்கம் அமைத்து, முத்தமிழ் வளர்த்த மூவா புகழ் மதுரைக்கு, சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் மதுரை மாநகராட்சி பகுதிகளான, மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலிருந்து கப்பலூர் வரை உள்ள 27 கிலோ மீட்டர் உள்வட்ட சாலையை (ரிங் ரோடு) நான்கு வழிச் சாலையாக அமைக்க ரூபாய் 200 கோடியை ஒதுக்கீடு செய்து, தொடர்ந்து தென்னகத்தின் ஏதேன்ஸ் மாமதுரைக்கு நிதியினை அள்ளி அள்ளித் தரும், தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு, இம்மான்ற கூட்டம் கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் - 4
மக்களால் நான், மக்களுக்காக நான் என்று தமிழக மக்களுக்காக, கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு வரலாற்று திட்டங்களை வாரி வழங்கியது மட்டுமல்லாது, சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து, அதன் மூலம் தமிழக மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திவரும், தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் புனித மக்கள் பணியினை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், கண்ணியமிக்க சபையாக விளங்கும் சட்டமன்றத்தில், மக்கள் பணியாற்றாமல், மாறாக ஜனநாயகத்தை பாழ்படுத்தும் வகையில், பல்வேறு மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டுவரும், தமிழக மக்களின் பொது ஜன விரோதி, எதிர்கட்சியாக இருக்க தகுதியற்ற, பண்பாட்டை காப்பாற்ற தெரியாத கருணாநிதியையும், கருணாநிதி மகன் ஸ்டாலினையும் மற்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களையும் இம்மாமன்றக் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
தீர்மானம் - 5
நடப்பாண்டில் இளங்கோவடிகளின் புதிய காப்பியம் படைப்பவருக்கு அல்லது சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்புவருக்கு, ஆண்டுதோறும் சித்திரை திங்கள் சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகளின் பெயரில் புதிய விருதுகள் வழங்கப்படும் என்றும், இதற்காக ஒரு இலட்சம் ரூபாயும், தங்கப்பதக்கமும் வழங்கப்படும் என்று தாயுள்ளத்தோடு சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் அறிவித்து, இதனைத் தொடர்ந்து தமிழர்களின் கலாச்சாரத்தையும், தமிழ் மொழிக்கும், தமிழ் மண்ணுக்கும், தமிழ் இனத்திற்கும் பாதுகாப்பு அரணாக விளங்கிவரும் தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு, இம்மாமன்றக் கூட்டம் கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
மேற்கண்ட தீர்மானங்களை மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா நிறைவேற்றும் போது அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் ஆதரித்தும் வாழ்த்தியும் பேசினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.