முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரில் மேலும் ஒரு 6 வயது மாணவி பலாத்காரம்

வியாழக்கிழமை, 31 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர்,ஆக.1 - பெங்களூரில் 6 வயது பள்ளி மாணவி பலாத்கார விவகாரம் அடங்குவதற்குள், அங்கு மீண்டும் 7 வயது மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் காமாக்ஷி பாளையாவை சேர்ந்த 7 வயது மாணவி ஒருவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயும், தந்தையும் தனியார் நிறு வனங்களில் பணியாற்றி வரு கின்றனர். இவர்கள் தங்கள் மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கும், மீண்டும் வீட்டில் கொண்டுவந்து விடுவதற்கும் அச்சிறுமி படிக்கும் பள்ளியில் கடைநிலை ஊழியராக பணியாற்றும் லட்சுமி என்பவரை நியமித்துள்ளனர்.

பல நேரங்களில் சிறுமியின் பெற்றோர் பணி முடிந்து மாலை 6 மணிக்கு மேல் வீடு திரும்புவர். அதுவரை அச்சிறுமி லட்சுமியின் வீட்டிலேயே விளையாடிக்கொண்டிருப்பார்.

இந்நிலையில் கடந்த 27-ம் தேதி மாலை 3.30 மணிக்கு பள்ளி முடிந்ததும் லட்சுமி அச்சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். தனக்கு வேறு வேலைகள் இருந்ததால் சிறுமியை வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார். இந்த நேரத்தில் கட்டிடத் தொழிலாளியான லட்சுமியின் மகன் சீனிவாசன் (26), சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப் பட்ட சிறுமியை கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போதுதான் விவரம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் காமாக்‌ஷிபாளையா காவல்நிலையத்தில் கடந்த புதன்கிழமை புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீஸார் அன்றே சீனிவாசனை கைது செய்தனர். சீனிவாசன் மீது இந்திய தண்டனை சட்டம் 314-ம் பிரிவின் கீழும், குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து காக்கும் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின் றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்