முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.125 கோடி ஹெராயின் பறிமுதல்: 6 பேர் கைது

வியாழக்கிழமை, 31 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக.01 - தலைநகர் டெல்லியில் கடந்த வாரத்தில் ரூ.125 கோடி மதிப்புள்ள 36 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இLு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு ஹெராயில் போதைபொருள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க டெல்லி மாநகர் போதை தடுப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர. கடந்த 26-ஆம் தேதி தெற்கு டெல்லியில் பைகாஜி காமா ப்ளேஸ் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஜமீர் மற்றும் ஷேக் ஆகியோரிடமிருந்து 8 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் அருவரும் கைது செய்யப்பட்டனர். மறுநாள் சலீம், முகமது மற்றும் சகிபா ஆகிய மூன்று பேர் போலீசில் சிக்கினர். இவரிகள் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள்.

அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 27 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. சந்தபாஷா என்பவர் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 1 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 36 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் சந்தை மதிப்பு ரூ.125 கோடு என டெல்லி சிறப்பு போலீஸ் கமிஷனர் ஸ்ரீவத்சா செய்தியாளர்களிடம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்