முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பிரமுகர்கள் மரணம்: முதல்வர் இரங்கல்

வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக. 22 - அ.தி.மு.க. பிரமுகர்கள் மரணமடைந்ததிற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதல்– அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

சேலம் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் நடராஜன், திருப்பூர் மாநகர் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் தங்கமணி, போடிநாயக்கனூர் ஒன்றியம், அம்மாபட்டி ஊராட்சிக் கழகச் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் மரண மடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டும்; லத்தூர் ஒன்றியம், நெமந்தம் கிளை இளைஞர் பாசறைச் செயலாளர் வெங்கடேசன் சாலை விபத்தில் அகால மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும் வருத்தமுற்றேன்.நடராஜன்,தங்கமணி,செல்வராஜ்,வெங்கடேசன்.ஆகியோர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

..

.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்