முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்குறுதியை நிறைவேற்றா விட்டால்... சிரஞ்சீவி எச்சரிக்கை

திங்கட்கிழமை, 1 செப்டம்பர் 2014      சினிமா
Image Unavailable

 

நகரி, செப்.02 - ஆந்திராவில் நடந்து முடிந்த பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் சந்திர பாபு நாயுடு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அவரை தூங்க விட மாட்டோம் என்று நடிகர் சிரஞ்சீவி எச்சரித்துள்ளார்.

நடந்து முடிந்த பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. உள்ளாட்சி தேர்தலில் கூட அக்கட்சி பெரும் தோல்வியை அடைந்தது. ஆந்திராவை பிரிக்கும் முடிவை எடுத்ததே காங்கிரஸ் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. பலர் கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சிக்கு தாவி விட்டனர். இந்த நிலையில் மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்த காங்கிரஸ் மேலிட தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக மாவட்டம் வாரியாக கூட்டம் நடத்தி வருகிறார்கள்.

கிழக்கு கோதாவரி மாவட்டம் காகிநாடாவில் நடந்த காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:

மாநில பிரிவினைக்கு காங்கிரஸ் மட்டும் காரணம் அல்ல. சந்திரபாபு நாயுடு உள்பட அனைத்து கட்சிகளும் மாநில பிரிவினைக்கு ஆதரவு தெரிவித்ததால்தான் காங்கிரஸ் மாநில பிரிவினை முடிவை எடுத்தது. எனவே, இந்த விஷயத்தில் காங்கிரஸ் மீது ஒட்டு மொத்த பழி சுமத்தி மற்ற கட்சிகள் தப்பி விட்டது. இதனை மக்களிடம் எடுத்து சொல்ல நாம் தவறி விட்டோம். தற்போது மக்களிடம் இது பற்றி புரிய வைக்க வேண்டும்.

விவசாயிகள், மகளிர் குழு கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறி சந்திரபாபு நாயுடு ஆட்சியை பிடித்தார். ஆனால் நேற்று தனது வாக்குறுதியில் இருந்து நழுவ பார்க்கிறார். வாக்குறுதியை நிறைவேற்ாறாவிட்டால் சந்திரபாபு நாயுடு அரசை எதிர்த்து காங்கிரஸ் போராடும். அவரை தூங்க விட மாட்டோம். சந்திரபாபு நாயுடுவுக்கு இனி தூங்காத இரவுகள் மக்களை ஏமாற்றி அவர் ஆட்சியை பிடித்துள்ளார். அவரை வீழ்த்தி மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வேண்டும்.

இவ்வாறு சிரஞ்சீவி கூறினார்.

சிரஞ்சீவியின் இந்த பேச்சுக்கு தெலுங்குதேசம் கட்சி கிண்டல் செய்துள்ளது. இதுபற்றி மந்திரி அய்யன்ன பன்ருடு கூறும்போது, ஆயிரம் சிரஞ்சீவி வந்தாலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முடியாது. ஒரு வேலை 50 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் கணவு கைகூடலாம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்