முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மைத்ரியை திருமணம் செய்யவில்லை: கார்த்திக் கவுடா

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2014      சினிமா
Image Unavailable

 

பெங்களூர், செப் 14 - மத்திய ரயில்வே மந்திரி சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடாவுக்கு சமீபத்தில் ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 24ம் தேதி நடிகை மைத்ரி, பெங்களூர் போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் கார்த்திக் கவுடா என்னை ரகசிய திருமணம் செய்து கொண்டார். அதை சொல்லி பாலியல் பலாத்காரம் செய்தார். இப்போது வேறு பெண்ணை திருமணம் செய்து என்னை ஏமாற்ற திட்டமிட்டுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இதையடுத்து பெங்களூர் ஆர்.டி. நகர் போலீசார் கார்த்திக் கவுடா மீது வழக்கு பதிவு செய்தனர். பாலியல் பலாத்காரம், மோசடி, தடயங்களை அழிக்க முயற்சி ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. போலீசார் அவரை தேடி வந்தனர். ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் கார்த்திக் கவுடா தலைமறைவானார். அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் கடந்த 8ம் தேதி கார்த்திக் கவுடாவுக்கு கோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் நேற்று முன்தினம் அதிகாலை 6.15 மணிக்கு பெங்களூர், ஆர்.டி. நகர் போலீ்ஸ் நிலையத்தில் ஆஜரானார்.

கார்த்திக் கவுடாவிடம் பெங்களூர் போலீஸ் துணை கமிஷனர் ஓம்பிரகாஷ் விசாரணை நடத்தினார். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. பின்னர் பெங்களூர் அம்பேத்கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கார்த்திக் கவுடாவுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. அவரது ரத்தம், சிறுநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதிக்கப்பட்டது. ஆண்மை பரிசோதனையும் நடந்ததாக தெரிகிறது. இன்னும் சில நாட்களில் தடயவியல் ஆய்வகத்தில் குரல் பரிசோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். கார்த்திக் கவுடாவிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது நடிகை மைத்ரியுடன் அவர் வைத்திருந்த தொடர்பு ரகசிய திருமணம், பாலியல் பலாத்காரம், தொலைபேசி உரையாடல், நடிகை கொடுத்த புகைப்படம், வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.

நடிகை மைத்ரியை நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. மஞ்சள் கொம்பு தாலி கட்டவில்லை. மங்களூரில் விருந்து கொடுக்கவில்லை. நடிகையின் புகார் அனைத்தும் பொய். இதில் அரசியல் சதி இருக்கிறது. எனது தந்தை சதானந்தகவுடாவின் புகழை கெடுக்கும் வகையில் இந்த சதி நாடகம் நடத்தப்பட்டுள்ளது. நடிகை மைத்ரி கர்நாடக மாநிலத்தில் பிரபலமானவர். இதனால் எனது நண்பர்கள் பலருக்கு அறிமுகமாகி இருந்தார். அந்த வகையில் எனக்கும் அறிமுகமானார். இதனால் அவருடன் சில மாதங்கள் நண்பனாக பழகினேன். மற்றபடி அவர் என்னுடைய காதலி அல்ல. மைத்ரி சொன்னது எல்லாமே பொய். வீடியோ, ஆடியோ, புகைப்படங்கள் அனைத்துமே பொய்யாக ஜோடிக்கப்பட்டுள்ளன என்று போலீசாரிடம் கார்த்திக் கவுடா வாக்குமூலம் அளித்தார். போலீசார் கேட்ட பெரும்பாலான கேள்விகள் அனைத்துக்கும் பொய் என்றே அவர் பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்