முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவையில் அண்ணா சிலைக்கு முதல்வர் மரியாதை

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை.செப்.16 - அண்ணாவின் 106வது பிறந்தநாளையொட்டி நேற்று கோவையில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கோவையில் முதல்வர் ஜெயலலிதா கோவை மாநகராட்சி அண்ணா தி.மு.க. மேயர் வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து வ.உ.சி. மைமானத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரித்தார்

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வரும் முதல்வர் ஜெயலலிதா மாலை 4.45 மணிக்கு அவினாசி ரோடு எல்.ஐ.சி. கார்னரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இது குறித்து அதிமுக தலைமயகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் , முதல்-அமைச்சருமான ஜெயலலிதா,

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 106-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு

மலர் தூவி மரியாதை செலுத்தி, பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டார்கள்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் 18.9.2014 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்று பிற்பகல் (15.9.2014 - திங்கட் கிழமை), கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளரை ஆதரித்து நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை சென்றடைந்தார்கள்.

பின்னர், அங்கிருந்து பொதுக்கூட்ட மேடைக்குச் செல்லும் வழியில், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 106-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை மாவட்டம், அவினாசி ரோடு, டுஐஊ கார்னரில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களுடைய திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி, ""பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 106-ஆவது பிறந்த நாள் விழா"" சிறப்பு மலரை வெளியிட்டார்கள். முதல் பிரதியை கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சருமான எஸ்,பி, வேலுமணி பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும்,

கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.இவ்வாறு அதிமுக தலைமயகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago