முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராசா - கனிமொழிக்கு கடுமையான தண்டனை வழங்க வாதம்

செவ்வாய்க்கிழமை, 23 செப்டம்பர் 2014      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, செப். 24 - மத்திய காங்கிரஸ் அரசில் தி.மு.க. அங்கம் வகித்தபோது ஆ.ராசா தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடைபெற்றது. இந்த முறைகேடான அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கு கலைஞர் டிவி.க்கு ரூ.214 கோடி கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற விசாரணையின் போது அமலாக்கப்பிரிவு வழக்கறிஞர் வாதாடினார். அப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கலைஞர் டிவி.க்கு ரூ.214 கோடி கைமாறியதற்கான ஆவணங்கள் உள்ளது. இந்த விவகாரத்தை மறைப்பதற்காக கலைஞர் டிவி. நிறுவனத்தினர் போலி ஆவணம் தயாரித்துள்ளது தெளிவாக தெரியவந்துள்ளது. எனவே கருணாநிதி மகள் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கருணாநிதியின் துணைவியார் தயாளுஅம்மாள் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 26ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்