முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை எம்எல்ஏ-வானார் புதுக்கோட்டை தமிழர்

திங்கட்கிழமை, 20 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

சென்னை, அக் 21 - மும்பையில் உள்ள சயான் கோலிவாடா சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகி உள்ளார் புதுக்கோட்டையை சேர்ந்த தமிழரான தமிழ்செல்வன்( 58). இவர் ரயில்வே அமைச்சகத்தில் ஒப்பந்ததாரராக பணியாற்றிய போது 2008ம் ஆண்டில் மும்பை தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. அப்போது தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் காயமடைந்த 30, 40 பேரை இவரும் மற்றவர்களும் சேர்ந்து மிக துணிச்சலாக கைவண்டிகளில் தள்ளி சென்று மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி உள்ளனர். மும்பையில் 1 5, 1 6 தமிழ் அமைப்புகளுக்கு தலைவராக இருந்ததால் அந்த பகுதி மக்கள் இவரை கேப்டன் என அழைக்க தொடங்கி இப்போது இவருக்கு அடைமொழியாகவே அது மாறி விட்டது. எனது தொகுதியில் உள்ள குடிசை பகுதி மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் என்கிறார் இந்த தமிழர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்