முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசியவாத காங்கிரசே தோல்விக்கு காரணம்: காங்.,

திங்கட்கிழமை, 20 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக் 21 - மகராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் அடைந்த தோல்விக்கு தேசியவாத காங்கிரஸ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளே காரணமென்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் தேர்தல் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று மகராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்தார். இது குறித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மகராஷ்டிரத்தில் காங்கிரஸ் அரசு சிறப்பாக பணிகளை செய்துள்ளது. ஆனால் அவையெல்லாம் காங்கிரசின் முன்னாள் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முன்பு எடுபடாமல் போனது. இதனிடையே மகராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் தங்களது கட்சியும் காங்கிரசும் தோல்வி அடைந்திருப்பதற்கு முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவானே காரணம் என்று தேசியவாத காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப்மாலிக் கூறுகையில், தேசியவாத காங்கிரசுக்கும், காங்கிரசில் இருக்கும் தனது அதிருப்தியாளர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுத்துவதற்கு பிருத்விராஜ் சவான் சதி திட்டங்களை தீட்டி செயல்பட்டார். அவரது இந்த செயலால்தான் தேர்தலில் தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் தோல்வியை சந்தித்துள்ளன என்றார். காங்கிரசின் தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பேற்பதாக காங்கிரஸ், மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பிருத்விராஜ் சவான் தெரிவித்தார். இது குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் கூறிய அவர், மகராஷ்டிரத்தில் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் செயல்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்