முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் 8 தொழிலாளர்கள் கடத்தி கொலை

திங்கட்கிழமை, 20 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், அக்.21 - பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் லெஸ்பெலா மாவட்டத்தில் அப்பாஸ்கோத் பகுதியில் கோழிப் பண்ணைகள் உள்ளன. அங்கு பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் பணிபுரிகின்றனர்.

இந்த நிலையில் அங்குள்ள ஒரு கோழிப்பண்ணைக்குள் துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த 9 பேரை மலைப் பகுதிக்கு கடத்தி சென்றனர். பின்னர் அவர்களை வரிசையாக நிற்க வைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனால் குண்டு பாய்ந்து 8 பேர் பரிதாபமாக இறந்தனர். ஒருவர் மட்டும் படுகாயம் அடைந்தார்.

அவர் ஜாம்குலாம் குவாதிர் ஆஸ்பதிரியில் அனுமதிக்கப்பட்டார். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான், முஷாபர், பகவல்பூர் உள்ளிட்ட நகரங்களை சேர்ந்தவர்கள். இந்த கொடூர சம்பவத்துக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இக்கொலைக்கு பலுசிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. தொழிலாளர்களை சுட்டுக் கொன்றவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்