முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் 8 ஷியாக்கள் படுகொலை

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், அக் 25:

பாகிஸ்தானில் ஷியா பிரிவின் கீழ் வரும் ஹஸாரா சமூகத்தை சேர்ந்த 8 பேரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.

அந்நாட்டின் குவெட்டா நகரில் உள்ள ஹஸார் காஞ்சி பகுதியில் அந்த 8 பேரும் பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது அவர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நிகழ்த்தினர். இது குறித்து போலீசார் கூறுகையில், ஹஸாரா சமூகத்தினரை குறி வைத்து இந்த தாக்குதல் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது. தாக்குதலை நிகழ்த்தி விட்டு குற்றவாளிகள் அனைவரும் அந்த இடத்தில் இருந்து தப்பி சென்று விட்டனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்