எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக். 31 - பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 107–வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில், முத்துராமலிங்க தேவரின் 107–வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை நடத்தப்பட்டது. பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்தில் 3 நாட்கள் இந்த விழா நடைபெற்றது.
முதல் நாள் ஆன்மீக விழா கொண்டாடப்பட்டது. 2–வது நாளான தேவரின் அரசியல் விழா நடைபெற்றது. நேற்று (வியாழக்கிழமை) குருபூஜை நடைபெற்றது. நினைவிடப் பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் காலையிலேயே தேவர் நினைவிடத்தில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் வழிபாடுகள் நடத்தப்பட்டன.
ஜெயலலிதா அணிவித்த
13 கிலோ தங்க கவசம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடம், மற்றும் சிலை உள்ளது. இந்த நினைவிடத்தில் உள்ள சிலைக்கு தங்க கவசம் அணிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்று கடந்த பிப்ரவரி மாதம் 9–ம் தேதி ஜெயலலிதா 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அணிவித்து வணங்கினார். இதையடுத்து தங்ககவசம் மதுரையில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 107வது பிறந்தநாள் விழாவும், 52வது குருபூஜை விழாவும் கடந்த 28ம் தேதி தொடங்கியது. இவ்விழாவையொட்டி மதுரையில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த தங்க கவசம் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு முதல் முறையாக இந்தாண்டு 107–வது ஜெயந்தி விழாவும் 52வது குருபூஜையும் நடைபெற்றது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி நேற்று காலை 9.50 மணிக்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மின்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன், வீட்டுவசதி மற்றும் நகர்புற அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவுத்துறை அமைச்சர் காமராஜ், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.எஸ்.சுந்தர்ராஜ், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரிய தலைவர் தங்கமுத்து, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் ஆர்.முருகையா பாண்டியன் ஆகியோர் தமிழக அரசு சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர்ராஜா, எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் முத்துராமலிங்கம், தமிழரசன், சாமி முருகன், குணசேகரன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஆர்.தர்மர், அவைத் தலைவர் செ.முருகேசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சுந்தரபாண்டியன், மகளிரணி மாவட்ட செயலாளர் எஸ்.கவிதா, திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரி, செயலாளர் முனியாண்டி, ராமநாதபுரம் ஒன்றிய கழக செயலாளர் அசோக்குமார், ஒன்றிய சேர்மன் சாந்தி சாத்தையா, ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் சந்தானலெட்சுமி, ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலாளர் ஆணிமுத்து உட்பட ஏராளமான அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் பசும்பொன்முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இதை தொடர்ந்து அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஜி.எம். ஸ்ரீதர்வாண்டையார், பார்வர்ட் பிளாக் சார்பில் கதிரவன் எம்.எல்.ஏ., திமுக சார்பில் ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மலர் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
அன்னதானம்
பசும்பொன் நினைவிடத்தில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் 15–வது ஆண்டாக லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான நிகழ்ச்சியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், வாரிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் இசக்கிமுத்து, பொருளாளர் எஸ்.ஆர்.தேவா, மாநில துணைத் தலைவர்கள் பி.கழுவன், எம்.கே.செந்தில் உள்ளிட்ட ஏராளமானபேர் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.