முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் கடலோர மாவட்டங்களில் 6 நாட்களுக்கு தொடர் மழை

வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே இடத்தில் தொடந்து நீடிப்பதால், தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களிலும், தென்கடலோர மாவட்டங்களிலும் தொடர்ந்து 6 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த ஒரு வாரமாக மழை இல்லாமல் இருந்தது.
நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. வேதாரண்யம் அருகே புஷ்பவனத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 3 பேர் காணவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 26 ஆம் தேதி கடலுக்கு சென்ற 3 பேரும் இன்னும் கரை திரும்பவில்லை என உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய ஊர்களிலும் கடல் சீற்றத்துடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் மண்டபத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பலத்த சூறைக் காற்று வீசுவதால் பாம்பன் பாலத்தில் ரயில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காலை 5.45 மணிக்கு ராமேஸ்வரம்-மதுரை செல்லும் பயணிகள் ரயிலும் பாம்பன் அருகே அக்காள்மடம் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் தாமதமாக செல்லும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் காற்றின் வேகத்தால் ஒன்றுடன் ஒன்று மோதி கடலில் மூழ்கியும், சேதமடைந்து உள்ளன.
இதுகுறித்து பேசிய வானிலை சென்னை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் கூறுகையில், தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது. மேலும் இலங்கை அருகே மேலடுக்கில் சுழற்சி உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் தென் கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் அநேக இடங்களில் தொடர்ந்து மழை பெய்யும். சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும் மற்ற மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். தென் மாவட்டங்களை பொருத்தவரை மழையின் தன்மை அதிகரித்து டிசம்பர் 3-ஆம்தேதி வரை மழை பெய்யும். சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நாளை முதல் மழை பெய்யத்தொடங்கும். அதன் பின்னர் மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து