முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ம் கட்ட தேர்தல்: ஜார்க்கண்டில் சோனியா - ராகுல் பிரசாரம்

வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

ஜாம்ஷெட்பூர் - ஜார்க்கண்ட் மாநிலத்தில் டிசம்பர் 2ம் தேதி 2ம் கட்ட தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் ஆகியோர் அங்கு பிரசாரம் செய்ய உள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் 5 கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த 25ம் தேதி நடைபெற்றது.
நக்சலைட் அச்சுறுத்தல் இருந்த நிலையிலும் முதல்கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 2ம் தேதி நடைபெறுகிறது. 13 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள
நிலையில், பாஜ, காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. முக்கிய தலைவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இன்று நடைபெறும் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுகின்றனர். ஜாம்ஷெட்பூரில் உள்ள கோபால் மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டு பேசுகிறார்.கொல்கன், பதம்டா பகுதிகளில் நடக்கும்
பொதுகூட்டங்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்கிறார். சிங்பம் மாவட்டத்தில் உள்ள சய்பசா, ஜகன்னாத்பூர் ஆகிய இடங்களில் ராகுல் காந்தி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். முக்கிய தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து