முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க நிர்வாகிகள் மரணம் : ஜெயலலிதா இரங்கல்

வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - காஞ்சிபுரம், உடுமலைப்பேட்டை மற்றும் திருவள்ளூரைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் மரணத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், காஞ்சிபுரம் நகர ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளரும், நகர 40-வது வார்டு கழகச்செயலாளருமான திரு.தனபால், திருப்பூர் புறநகர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, நகரஎம்.ஜி.ஆர் மன்ற துணைத் தலைவரும், நகர 13-வது வார்டு கழகச் செயலாளருமான திரு.செங்குட்டுவன் ஆகியோர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டும், கிருஷ்ணகிரி மாவட்டம் , சூளகிரி கிழக்கு ஒன்றிய மாணவர் அணித்தலைவர் திரு.பூபதி, திருவள்ளூர் மேற்கு மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், பிரியாங்குப்பம் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.ஜீவரத்தினம் ஆகியோர் சாலை விபத்தில் அகால மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டும் ஆற்றொண்ணாத் துயரம் அடைந்தேன்.
அன்புச் சகோதரர்கள் திரு.தனபால், திரு.செங்குட்டுவன், திரு.பூபதி மற்றும் திரு.ஜீவரத்தினம் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து