முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி பாசறை துணைச் செயலாளர் அ.தி.மு.க விலிருந்து நீக்கம்

வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - தூத்துக்குடி மாவட்ட கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை துணைச்செயலாளர் மனோகரன் அ.தி.மு.க விலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது,
கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணைச்செயலாளர் பி.மனோகரன் இன்று(நேற்று) முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து