முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொக்கநாதபுரம் பிரத்தியலிங்கராதேவி கோவிலில் மூன்று சிறப்பு யாகங்கள்

வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

மதுரை - ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டி சொக்கநாதபுரம் பிரத்தியலிங்கராதேவி கோவிலில் சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை சார்பில் மூன்று சிறப்பு யாகங்கள் நடைபெற்றது.
தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா மீண்டும் வரவேண்டி சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்து கல்லல் அருகே உள்ள சொக்கநாதபுரம் மகா உத்திர பிரத்தியலிங்கராதேவி கோவிலில் சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை சார்பில் உக்கிரபிரத்தியங்கிராயாகம், வீரசரர்பேஸ்வரயாகம், அஸ்வாரூட வாராஹி என்கின்ற மூன்று சிறப்பு யாகங்கள் தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பொறுபேற்று தமிழக மக்களுக்கு பணியாற்றிட வேண்டி வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓத நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிறப்பு அர்ச்சனைகளும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த சிறப்பு யாகம் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் கல்லல் ஒன்றிய தலைவருமான கல்லுவயல் கரு.அசோகன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாநில அம்மா பேரவை செயாலரும் வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், பி.ஆர்.செந்தில் நாதன் எம்.பி., காரைக்குடி நகர் மன்ற தலைவர் கற்பகம் இளங்கோ, மாநில பாம்கோ தலைவர் உமாதேவன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முருகாந்தம், முன்னாள் எம்.எல்.ஏ சந்திரன், காளையார்கோவில் சேர்மன் ஆரோக்கிய சாமி, கல்லல் ஒன்றிய செயாலளர் ஜெயகுணசேகர், சாக்கோட்டை ஒன்றிய சேர்மன் சுப்பிரமணியன், காளையார்கோவில் ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மாவட்ட அவை தலைவர் காளிதாசு, மானமதுரை ஒன்றிய சேர்மன் மாரிமுத்து, சிவகங்கை ஒன்றிய சேர்மன் பாஸ்கரன், எஸ்.புதூர் ஒன்றிய சேர்மன் ராஜமானிக்கம், மாவட்ட இளையரணி துணை செயலாளர் மகேந்திரன் மற்றும் அதிமுகவினரும் பொதுமக்களும் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து