எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கார்த்திகைப் பட்ட நிலக்கடலை சாகுபடி செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய நவீன தொழில் நுட்ப முறைகளை பற்றி நம்பியூர், வேளாண் உதவி இயக்குநர் ஆசைத்தம்பி தெரிவித்துள்ளதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் எண்ணெய் வித்து பயிர்களில் ஒரு முக்கியமான பயிராக நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நிலக்கடலை எண்ணெய் உற்பத்தியில் 94 சதவீதம் உணவிற்காகவும், 4 சதவீதம் தொழில்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.
இந்தியா முதலிடம்: இதில் 54 சதவீதம் எண்ணெய் சத்து உள்ளது. நிலக்கடலை உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. நிலக்கடலைப் பருப்பில் அதிக அளவில் புரதச்சத்து உள்ளது. மேலும், இது ஒரு சிறந்த தீவனப் பயிராகப் பயன்படுகிறது. நிலக்கடலை பருப்பிலிருந்து எண்ணெய் எடுத்தபின் எஞ்சிய புண்ணாக்கில் 51.75 சதவீதம் புரோட்டினும், 0.22 சதவீதம் கொழுப்பும், 26.94 சதவீதம் கார்போஹைட்ரேட்டும் 5.7 சதவீதம் தாதும் உள்ளது. எனவே கால்நடைகளுக்கு ஊட்ட உணவாக இதைப் பயன்படுத்தலாம். இதில் 7 சதவீதம் தழைச்சத்தும் உள்ளதால் ஊட்டமிகு இயற்கை எருவாகவும் பயன்படுகிறது.
இரண்டு மடங்கு மகசூல்: இப்படிப்பட்ட பெருமைகள் அடங்கிய நிலக்கடலை சராசரியாக இறவையில் ஏக்கருக்கு 2 டன்களும் மானாவாரியில் ஒரு டன்னும் மகசூல் கொடுத்து வருகிறது சில முதன்மையான நவீன தொழில் நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த மகசூலை இரண்டு மடங்காக்க இயலும்.
பருவம் மற்றும் மண் வகை: இறவை நிலக்கடலையைப் பொருத்தவரை ஏப்ரல், மே (சித்திரைப்பட்டம்) ஜூன், ஜூலை (ஆடிப்பட்டம்) டிசம்பர், ஜனவரி (கார்த்திகைப் பட்டம்) ஆகிய மாதங்களில் நிலக்கடலை சாகுபடி செய்ய ஏற்றது. பொதுவாக கார்த்திகைப் பட்டம் என்பது கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தில் (நவம்பர், டிசம்பர்) விதைப்பு செய்யப்படுகிறது. கார்த்திகை மாதத்திற்குள் விதைப்புச் செய்வது அதிக மகசூலுக்கு வாய்ப்பை அதிகரிக்கிறது.
மண்: மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்கள் நிலக்கடலைக்கு ஏற்றதாகும்.
உழவு: சட்டிக் கலப்பை பயன்படுத்தி உழுதபின் 3 அல்லது 4 முறை இரும்புக் கலப்பை அல்லது நாட்டுக் கலப்பைக் கொண்டு கட்டிகள் நன்கு உடையும் வரை (புழுதி ஆகும் வரை) உழ வேண்டும்.
ரகங்கள்: டி.எம்.வி-7, டி.எம்.வி-13, கோ- 3, கோ-4, வி.ஆர்.ஐ-2, வி.ஆர்.ஐ-3, வி.ஆர்.ஐ -5 , வி.ஆர்.ஐ -6 , ஏ.எல்.ஆர்-3 ஆகியவை ஏற்ற இரகங்களாகும்.
விதை நேர்த்தி: விதைகளை திரம் அல்லது மாங்கோசெப் மருந்து - 4 கிராம் - கிலோ விதைக்கு அல்லது கார்பென்டசிம்-2 கிராம்ஃகிலோ என்ற அளவில் விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்யவும். இதை விதைப்புக்கு ஒரு நாள்முன்பு, செய்ய வேண்டும். இரசாயன மருந்துக்குப் பதிலாக ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைகோடெர்மா அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் என்ற நன்மை செய்யும் உயிரியல் மருந்துகளைக் கலந்தும் விதைக்கலாம். மேலும், டிரைகோடெர்மா விரிடி… உயிரியல் பூஞ்சாணத்தை ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் விதைப்பின் போது சிறிது தொழு உரத்துடன் கலந்து இடலாம். இதன் மூலம் தண்டு அழுகல், கழுத்தழுகல்,வேரழுகல் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது. நிலக்கடலைப் பயிரில் போதுமான பயிர் எண்ணிக்கை இல்லாதது மகசூல் குறைவுக்கு முக்கியமான காரணமாதலால், விதை நேர்த்தி செய்வது மிகவும் அவசியமாகும்.
ரைசோபியம் விதை நேர்த்தி: ரைசோபியம் உயிர் உரம்-400 கிராம் (2-பாக்கெட்) என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு உண்டான விதையுடன் அரிசிக் கஞ்சி சேர்த்துக் கலந்து நிழலில் காயவைத்து விதைக்க வேண்டும். மேலும், விதைப்பின் போது ரைசோபியம் 4 பாக்கெட், பாஸ்போ பேக்டர் - 4, பாக்கெட் சிறிது தொழு உரத்துடன் கலந்து வயலில் இட வேண்டும்.
இடைவெளி: 30 ஒ 10 செ.மீ இடைவெளியிலும், 4 செ.மீ ஆழத்திலும் விதைக்க வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் இருக்க வேண்டும். அதாவது ஒரு சைக்கிள் டயர் அளவுக்குள் 11 செடிகள் இருக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச் சத்து மேலாண்மை: இறவைப் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 7:14:21 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து தரக்கூடிய 15 கிலோ யூரியா, 88 கிலோ சூப்பர் பாஸ்பேட் 35 கிலோ பொட்டாஷ் உரங்களை முழுவதும் அடியுரமாகவே இடவேண்டும். அல்லது டி.ஏ.பி 40 கிலோவுடன் பொட்டாஷ் 35 கிலோ – சேர்த்து அடியுரமாக இடலாம். நிலக்கடலைக்கு அனைத்து உரங்களையும் விதைப்பின் போது அடியுரமாகவே இடவேண்டும் என்பது முக்கியமானதாகும்.
நுண்ணூட்டமிடுதல் : நிலக்கடலை நுண்ணூட்டம் 5 கிலோ-வை 40 கிலோ மணலுடன் கலந்து, விதை விதைத்தவுடன் மேலாகத் தூவ வேண்டும். பயிர் வெளுப்பு, மற்றும் மஞ்சள் நிறமாகி வளர்ச்சி குன்றுவதை இதன் மூலம் தவிர்க்கலாம்.
களைக்கொல்லி: விதை விதைத்து 3 - வது நாளில், வயலில் போதுமான ஈரப்பதம் இருக்கும் போது ஏக்கருக்கு 800 மில்லி ’புளுகுளோரலின்” – என்ற களைக்கொல்லியை 300 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும். அவ்வாறு தெளிக்காத பட்சத்தில் விதைத்த 20 - 25 ம் நாளில் களை முளைத்தபின் தெளிப்பதற்கு ‘இமாசிதாபைர்” என்ற களைக்கொல்லியை ஏக்கருக்கு 300 மில்லி என்ற அளவில் தெளிக்கலாம்.
ஊட்டச் சத்து குறைபாடு: துத்தநாக குறைபாடுள்ள நிலத்திற்கு ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட் இடலாம். மேலும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் உள்ள நுண்ணுட்டக் கலவைகளையும் பயன்படுத்தலாம்.
ஜிப்சம் இடுதல்: நிலக்கடலை உற்பத்தியை அதிகரிக்க பயிருக்கு ஜிப்சம் இடுதல் மிகவும் அவசியம். இதில் 23 சதம் - சுண்ணாம்பு சத்தும், 18 சதம் - கந்தக சத்தும் அடங்கியுள்ளது. இதில் சுண்ணாம்பு சத்தானது காய்கள் திரட்சியாகவும், அதிக எடையுடன் காய் உருவாகவும் வழி செய்கிறது.
கந்தகச் சத்தானது நிலக்கடலையில் எண்ணெய்ச்சத்தை அதிகரிக்கிறது. ஒரு ஏக்கருக்கு 80-கிலோ ஜிப்சத்தை அடியுரமாக விதைக்கும்போது இடவேண்டும், பின்னர் 40-45-ம் நாளில் களை வெட்டும் போது மீண்டும் ஒரு முறை 80-கிலோ ஜிப்சத்தை இட்டு பிறகு மண் அணைக்க வேண்டும்.
பூக்கள் உதிர்வதைத் தடுக்கவும், அதிக காய்கள் பிடிக்கவும் ஏதுவாக’பிளேனோபிக்ஸ்” - என்னும் பயிர் ஊக்கியை ஏக்கருக்கு 140 மில்லி என்ற அளவில் விதைத்த 25 - ம் நாளிலும் 35 - ம் நாளிலும் இரண்டு முறை தெளிக்கலாம்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு: சுருள் பூச்சி மற்றும் சிகப்பு கம்பளிப்புழுவை கட்டுபடுத்த துவரை, தட்டை (அ) உளுந்து பயிர்களை ஊடுபயிர் செய்வதால் அவற்றில் இடப்படும் முட்டைகளை எளிதில் சேகரித்து அழித்து விடலாம்.
பொருளாதாரச் சேதநிலையை அறிந்து வேளாண்மைத்துறை பரிந்துரைக்கும் மருந்துகளை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். இப்படிப் பல்வேறு நவீன உத்திகளைக் கையாண்டு நிலக்கடலை சாகுபடியில் இரட்டிப்பு மகசூல் பெறலாம்.
இவ்வாறு நம்பியூர், வேளாண்மை உதவி இயக்குநர் ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.