எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, 108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் தொன்மை வாய்ந்த திருத்தலமாக திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் விளங்குகின்றது. இங்கு பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய எம்பெருமான்கள் இத்திருக்கோயிலில் உள்ள பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார்கள். இத்திருக் கோவிலில் மூலவர் அருள்மிகு வேங்கடகிருஷ்ணன், தாயார் ருக்மணி, அண்ணன் பலராமன், தம்பி சாத்யகி, பிள்ளை அநிருத்தன், பேரன் பிருத்யும்னன் ஆகியோருடன் குடும்ப சகிதமாக சேவை தருகிறார்.
இத்திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வரும் ஜனவரி 8-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு கீழ்க்கண்ட ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. க்யூ வரிசை விபரங்களை சேவார்த்திகள் அறிய திருக்கோயிலினுள் செல்லும் வழிகள், திருக்கோயிலிலிருந்து வெளியேறும் வழிகள் ஆகிய விபரங்கள் அடங்கிய வரைபடம் தென்மாட வீதியில் அமைந்துள்ள திருக்கோயில் நூலகத்தின் அருகில் வைக்கப்படும்.
திருக்கோயிலுக்கு வெளியே கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் பரமபதவாசல் சிறப்பு நிகழ்ச்சிகளை சேவார்த்திகள் கண்டு களிக்கும் வண்ணம், அகண்ட எல்.இ.டி திரைகள் அமைக்கப்படும். சென்னை மாநகராட்சியின் மூலம் அனைத்து சுகாதாரப் பணிகளும், அவசர உதவிக்காக சிறப்பு மரத்துவக் குழுக்களும் செயல்படும். சேவார்த்திகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும். சேவார்த்திகளின் வசதிக்காக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் மற்றும் தென்னக ரயில்வே மூலம் சிறப்பு ரயில் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்படும். சேவார்த்திகளின் பாதுகாப்புக்காக நான்கு மாட வீதிகளிலும் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கப்படும். திருக்கோயில் முழுவதும் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படும்.
சேவார்த்திகள் முறை வரிசையில் செல்ல புதியதாக ஸ்டெயின்லேஸ் ஸ்டீல் கம்பிகளால் வரிசைகள் கூடுதலாக அமைக்கப்படும். திருக்கோயில் உள் பகுதி மற்றும் வெளிப்பகுதியில் மின் அலங்காரம் கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட உள்ளது. திருக்கோயிலுக்கு வருகை தரும் சேவார்த்திகளுக்கு இலவசமாக லட்டு பிரசாதமாக வழங்கவும், கீதை சுலோகம், சாராம்சம் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் நாமாவளி அடங்கிய புத்தகம் திருக்கோயில் வளாகத்தில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.
திருக்கோயிலுக்கு வருகின்ற சேவார்த்திகளுக்கு திருக்கோயில் மூலமாக திருக்கோயிலின் வரலாறு அடங்கிய சிற்றட்டை அருள்மிகு ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் படம் அர்ச்சனை செய்யப்பட்ட குங்குமம், கற்கண்டு ஆகியவை வழங்கப்பட உள்ளது.
மேற்கண்டவாறு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதை நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முனைவர் மா.வீரசண்முகமணி அவர்கள், இத்திருக்கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர், துணை ஆணையர்/செயல் அலுவலர் த.காவேரி, துறை அலுவலர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
வரும் ஜனவரி 8-ம் தேதி வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சி நிரல்.
அதிகாலை 2.30 மணிக்கு மூலவர் முத்தங்கி சேவை
(ரூ.300/- டிக்கட் மற்றும் பேட்ஜ் உள்ளோர் திருக்கோயிலினுள் மேற்கு கோபுர வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுதல். அதிகாலை 2.30 –அதிகாலை 2.45 மணிவரை உற்சவர் மகா மண்டபத்தில் அலங்காரம். அதிகாலை2.45 – 4.00மணி மகா மண்டபத்தில் உற்சவர் வைர அங்கி சேவை. அதிகாலை 4.00 மணி உற்சவர் ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி மகா மண்டபத்திலிருந்து உள்புறப்பாடு துவங்குதல். அதிகாலை 4.30 மணிக்கு பரமபதவாசல் திறப்பு - நம்மாழ்வாருக்கு காட்சி தருதல். அதிகாலை 4.30 மணி முதல் 5.00 மணி வரை வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் நம்மாழ்வாருக்கு மரியாதை, வேத திவ்யப்பிரபந்தம் துவங்குதல். அதிகாலை5 – 5.10மணி வரை பரமபத வாசலில் உபயதாரர் மரியாதை மற்றும் தரிசனம். அதிகாலை 5.10 மணி முதல் 5.45 மணி வரை திருவாய்மொழி மண்டபத்தில் 3 சுற்றுக்கள் உற்சவர் பத்தி உலா நடைபெற்று திருவாய்மொழி மேல் மண்டபத்தில் அமைந்துள்ள புண்ணிய கோடி விமானத்தில் வைர அங்கியுடன் உற்சவர் எழுந்தருளி சேவை சாதித்தல்.
அதிகாலை 5.45 மணி திருவாய்மொழி மண்டபத்தில் சேவார்த்திகள் உற்சவரை சேவித்து விட்டு வெளி வருதல். காலை 6.00 மணி முதல் நள்ளிரவு வரை சேவார்த்திகள் சிறப்பு தரிசனக் கட்டணம் ரூ.100/- பின்கோபுர வாசல் வழியாகவும் மற்றும் கட்டணமின்றி பொது தரிசனம் முன் கோபுர வாசல் வழியாகச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காலை 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மேற்கு கோபுர வாயில் வழியாக கட்டணமின்றி பரமபதவாசலைக் கடந்து உற்சவரை திருவாய்மொழி மண்டபத்தில் சேவித்து, கிழக்கு கோபுர வாயில் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு 10.00 மணிக்கு உற்சவர் அலங்கார திருமஞ்சனம் இரவு 12.00 மணிக்கு நம்மாழ்வாருடன் பெரிய மாட வீதியில் திருவீதி உலா. 09.01.2017 முதல் 16.01.2017 முடிய மாலை 5.45மணிக்கும், 11.01.2017 காலை 10.00 மணி மற்றும் 17.01.2017 காலை 9.30 மணிக்கும் பரமபதவாசல் சேவை நடைபெறும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.