எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் புதிய குற்றவியல் நடுவர் நீதிமன்ற தொடக்க விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் .வி.எம்.ராஜலட்சுமி, மாவட்ட முதன்மை நீதிபதி கே.ராஜசேகர், மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் மு.கருணாகரன்,இ.ஆ,ப., முன்னிலையில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் புதிய குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தினை தொடங்கி வைத்தார்.இவ்விழாவில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைத்துறை அமைச்சர் பேசியதாவது:-
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின் படி திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றம் ரூ.68 லட்சம் செலவில் ஒரு நீதிபதி உட்பட 16 பணியாளர்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில பாளையங்கோட்டையில், 25 நீதிமன்றங்களும் தென்காசி, 5 நீதிமன்றங்களும் அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், ராதாபுரம் ஆகிய பகுதிகளில் தலா 4 நீதிமன்றங்களும் உட்பட மொத்தம் 47 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 47 நீதிமன்றங்களில் 44 நீதி மன்றங்கள் சொந்த அல்லது அரசு கட்டிடங்களில் இயங்கி வருகிறது. நீதித்துறை சுதந்திரமாகவும், மக்களுக்கு விரைந்து நீதி கிடைக்கவும் புரட்சித்தலைவி அம்மா நீதி நிர்வாகத்தில் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள்.
புரட்சித் தலைவி அம்மா கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 223 புதிய நீதிமன்றங்களை உருவாக்கிட உத்தரவிட்டதுடன் இதற்க்கு ரூ.58.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் 9 நீதிமன்றங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. 2016 – 17ம் ஆண்டில் உளுந்தூர் பேட்டை, காங்கேயம் மற்றும் ஆலந்தூரில் தலா ஒரு சார்பு நீதிமன்றம் ரூ.2.94 கோடியில் அமைப்பதற்க்கும், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ரூ.8.69 கோடியில் கூடுதலாக மூன்று தளங்கள் அமைக்கவும், சாத்தான்குளத்தில் ரூ.5.55 கோடியில் நீதிமன்ற கட்டடம் மற்றும் குடியிருப்புகள் அமைப்பதற்கும், திருவள்ளுரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ரூ.23.50 கோடியில் கட்டுவதற்கும், திருப்பூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் ரூ.33.75 கோடியில் கட்டுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களுக்கு தேவையான ஊஊவுஏ கேமாரக்கள் கம்பியூட்டர்கள் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் மற்றும் கூடுதல் பணியாளர்களை நியமிக்க ரூ.45.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. அம்மா அவர்களால் புதிய பல சிறப்பு நீதிமன்றங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. 25 குடும்பநல நீதிமன்றங்கள் ஒப்பளிக்கப்பட்டு 20 நீதிமன்றங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது திருநெல்வேலியிலும் ஒரு நீதிமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள 8 நீதிமன்றங்களில் 4 நீதிமன்றங்கள் கடந்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டதாகும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 32 நீதிமன்றங்கள் தற்போது செயல்பட்டு வருகிறது. இதில் 22 நீதிமன்றங்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் உருவாக்கப்பட்டது. பெண்கற்பழிப்பு, கொலை தொடர்பான வழக்குகளை விசாரிக்க மத்திய அரசு 08.01.2013 அன்று மகளிர் நீதிமன்றங்களை அமைக்க உத்தரவிட்டது.
அதற்கு முன்பாகவே அம்மா 1.1.2013 அன்று தமிழகத்தில் மகளிர் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிட்டார்கள். தேங்கி கிடக்கும் சிறு வழக்குகளை துரிதமாக விசாரணை செய்ய 31 மாலை நேர நீதிமன்றங்கள் பெரம்பலுர் மாவட்டம் தவிர 31 மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ளது. இது போல மோட்டார் வாகன விபத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் 32 தமிழகத்தில் உள்ளது.
மத்திய அரசு நிதியுதவி அளிக்க இயலாது என தெரிவித்த 49 விரைவு நீதிமன்றங்களையும் மாவட்ட நீதிமன்ற தகுதிக்கு தரம் உயர்த்தி நிரந்தர நீதிமன்றங்களாக அம்மா உத்தரவிட்டார்கள். நீதிமன்ற கட்டடங்கள், நீதிபதி குடியிருப்புகள் அமைப்பது போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.511.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.93 கோடி மட்டுமே மத்திய அரசின் பங்காகும். 2014 ம் ஆண்டில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தால் தமிழ்நாட்டில் மட்டும் ஒரே நாளில் 15,08,767 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.915.07 கோடி தீர்வு காணப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழகத்தில் தான் 32 மாவட்டங்களிலும் நிரந்தர மக்கள் நீதிமன்றங்கள் ரூ.7.70 கோடி செலவில் அம்மா அவர்களால் ஏற்படுத்தப்பட்டது. வழக்குறைஞர்களின் நலன் கருதி சேமநல நிதியை உயர்த்தி வழங்கியது. 5 ஆண்டுகளில் 213 அரசு உதவி வழக்கு நடத்துனர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது உள்ளிட்ட பல திட்டங்களை அம்மா செயல்படுத்தியுள்ளார்கள். ஆலங்குளத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு இடம் தேர்வு செய்து முன்மொழிவு அனுப்பப்பட்டதும் சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றம் துவக்கப்பட்டுள்ளதால் ஆலங்குளம் பகுதி பொது மக்களின் நிலுவையிலுள்ள வழக்குகள் விரைந்து நிவாரணம் பெற இயலும் - எனப் பேசினார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பேசியதாவது:-
அம்மா துறை தோறும் புதுமைகளையும் வித்தியாசமான திட்டங்களையும் தினந்தோறும் செய்வதையே தனது லட்சிய நோக்கமாக கொண்டவர். தமிழகத்தில் சட்டத்துறையில் நல்ல பல திட்டங்களை சீரிய முறையில் செய்து வந்தவர்கள் அம்மா அவர்களின் ஆட்சியில் தான் சென்னை உயர்நீதி மன்றத்தினுடைய நீதிபதி சட்டமன்றத்தில் நடைபெற்ற பெருமை வாய்ந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கு பெறச் செய்த பெருமை அம்மா அவர்களையே சாரும். ஆலங்குளம் பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் வழக்கு நிலுவைகளில் உள்ள பொது மக்கள் விரைவில் நிவாரணம் பெறுவார்கள் எனப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் முருகையாபண்டியன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன்,இ.கா.ப., தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் ராஜமாணிக்கம், ஆலங்குளம் நீதிமன்ற நடுவர் பிச்சைராஜன், ஆலங்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சுதாபரமசிவன்,பரணிசங்கரலிங்கம்,இ.நடராஜன்,சண்முக சுந்தரம், திருநெல்வேலி மாவட்ட அரசு வழக்கறிஞர் சிவலிங்கமுத்து, ஆவின் சேர்மன் ரமேஷ், கண்ணன், எஸ்.எஸ்.என்.சொக்கலிங்கம், சேர்மபாண்டி, பாண்டியராஜ், மற்றும் வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகள்,பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.