முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் ஜெருசேலம் புனித பயணத்திற்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு : கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      திருச்சி

திருச்சி மாவட்ட ஜெருசசேலம் புனித பயணத்திற்கு தமிழக அரசின் நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி. தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறித்தவர்கள் ஜெருசேலம் புனித பயணத்திற்கு தமிழக அரசின் நிதியுதவியாக நபர் ஒருவருக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 30.12.2016 மாலை 5.45 மணிக்குள் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807-(5வது தளம்) அண்ணாசாலை, சென்னை-600 002 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள்; அனுப்பப்பட வேண்டும். இதர நிபந்தனைகளில் எந்தவித மாற்றம் ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கிறித்தவ பெருமக்கள் இத்திட்டத்தி;ன் மூலம் நிதியுதவியைப் பெற்று பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்