முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில்விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்குவது குறித்து ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      சேலம்
Image Unavailable

 

சேலம்,

சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்குவது தொடர்பான ஆலோசனை நேற்று (23.12.2016) -ம் தேதி காலை 11.00 மணிக்கு சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் விவசாயிகளுக்கு 2016-17-ம் ஆண்டு குறியீடு ரூ.694 கோடியில் நாளது தேதி வரை  41238 விவசாயிகளுக்கு 264.38 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குறியீட்டினை  எய்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் சேலம் மண்டல கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.இராஜேந்திர பிரசாத், சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் .ஆ.க.சிவமலர், வங்கியின் பொது மேலாளர் எஸ்.தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்