முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலத்தில் பிரபல கொள்ளையர்கள் 5 பேர் கைது:35 பவுன் நகை பறிமுதல்

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      சேலம்

 

சேலம்:சேலத்தில் கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 35 பவுன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்தில், ஆட்டையாம்பட்டி தாரமங்கலம், மேச்சேரி, ஏத்தாப்பூர், மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய சிலர் வழிப்பறி செயல்களில் ஈடுபட்டு வருவதாக எஸ்பி ராஜன் கவனத்துக்கு வந்தது. அவருடைய உத்தரவின்பேரில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான தனிப்படையினர் கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில் ஆட்டையாம்பட்டி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, 2 பைக்கில் சந்தேகத்துக்குரிய வகையில் 5 பேர் வந்தனர். அவர்களை மடக்கிய போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.5 பேரும் வீடுகளில் கொள்ளையடிப்பதும், நகை பறிப்பில் ஈடுபடுவதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஆட்டையாம்பட்டியை சேர்ந்த விஜயன், பிரபு, சந்தோஷ், கேசவன், அய்யனார் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 35 பவுன் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு பைரோஜி கிராமத்தில் டாஸ்மாக் ஊழியரை கொலை செய்து பணத்தை கொள்ளையடித்த வழக்கில், இவர்கள் 5 பேருக்கும் சம்பந்தம் இருப்பது தெரிய வந்தது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்