முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு மாவட்ட எம்.ஜீ.ஆர் மன்றம் மற்றும் மாணவரணி சார்பில் அஞ்சலி செலுத்தி தீர்மாணம நிறைவேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      கடலூர்
Image Unavailable

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களது ஆன்மா இறைவனடி நிழற்ப்பார கடலூர் கிழக்கு மாவட்ட எம்.ஜீ.ஆர் அணி சார்பில் மாவட்ட செயலாளர் சேவல் ஜீ.குமார் தலமையில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் தமிழக தொழில்த்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.பின்னர் கழக பொதுச்செயலாளர் பதவியை சசிகலாஅவர்கள் நிரப்பிடவும்,அம்மா அவர்கள் விட்டு சென்ற கட்சி பணியும்,ஆட்சி பணியும் தலமையேற்று நடத்திட வேண்டும் என்ற தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட,நகர,ஒன்றிய கழக,பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்,இதனை தொடர்ந்து மாவட்ட மாணவரணி சார்பில் ஜெயலலிதா அஞ்சலி செலுத்தியும், சசிகலா பொதுச்செயலாளர்,தமிழக முதலமைச்சர் பதவியை வகிக்க வேண்டும் என்ற தீர்மாணத்தை மாவட்ட மாணவரணி செயலாளர் பொறியாளர் மகேஷ் நிறைவேற்றினார்.இதனை கழக நிர்வாகிகள் ஒருமனதாக ஏற்றனர். மாவட்ட அவைத்தலைஅவர் கோ.ஐய்யபன்,முன்னாள் அமைச்சர் எம்.சி.தாமோதரன்,மாவட்ட மீனவரணி செயலாளர் தங்கமணி,மாவட்ட அம்மா பேரவை ரவிச்சந்தரன்,மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் காசிநாதன்,மாவட்ட அண்ணாதொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.பாலகிருஷ்ணன்,முன்னாள் நகர மன்ற தலைவர் ஆர்.குமரன்,மாவட்ட அம்மா பேரவை தலைவர் ஏ.கே.எஸ்.சுப்ரமணியன்,முன்னாள் தொகுதி செயலாளர் பெருமாள் உட்ப்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்