முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல்லில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து அவதரித்த நாளான டிசம்பர் 25ம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல்லில் பல்வேறு தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ்  பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு மேல் துவங்கிய இந்த பிரார்த்தனை நள்ளிரவு வரை ஞிடித்தது. திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை பேராலயத்தில் பங்குத் தந்தை செல்வராஜ் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதில் பங்கு மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தங்கள் குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து தேவாலயத்திற்கு அழைத்து வந்து பிரார்த்தனையில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் தூய வளனார் பேராலயம், சி.எஸ்.ஐ. தேவாலயம், சவரியார் பாளையம் தூய சவேரியார் பேராலயம் என அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு கூட்டுத் திருப்பலி மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

மேலும் அதிர்வேட்டுகள் வெடிக்கப்பட்டது. தேவாலயங்கள் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. பிரார்த்தனையில் கலந்து கொண்ட அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டதுடன் ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்