முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நின்றிருந்த கார் மீது மோட்டார் பைக் மோதி இளைஞர் காயம்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      தேனி

போடி : தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் நின்றிருந்த கார் மீது மோட்டார் பைக் மோதிய விபத்தில் மோட்டார் பைக்கில் சென்ற இளைஞர் பலத்த காயமடைந்தார்.

போடி பெரியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணி (70) என்பவருக்கு சொந்தமான காரை போடி மூணாறு சாலையில் ஏ.வி.ச. கல்லூரி அருகே நிறுத்தியிருந்த போது முந்தல் பகுதியிலிருந்து போடி நோக்கி வேகமாக வந்த மோட்டார் பைக், நின்றிருந்த கார் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் மோட்டார் பைக்கை ஓட்டி வந்த போடி புதுக்காலனியை சேர்ந்த பிச்சைமணி (20) என்ற இளைஞர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். இதில் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் போடி நகர் காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்