முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புற்றுநோயை ஆரம்பத்திலேயே தடுக்க...

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      மருத்துவ பூமி
Image Unavailable

புற்றுநோயைக் குணப்படுத்த சிகிச்சைகள் இருந்தாலும், ஏராளமான மக்கள் இந்த கொடூர நோய்க்கு அதிக அளவில் பலியாகின்றனர். இதற்கு காரணம் இதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே சரியாக கவனிக்காமல் இருப்பது தான். புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை கவனித்து ஆரம்பத்திலேயே சிகிச்சை மேற்கொண்டு வந்தால், அதனால் ஏற்படும் உயிரிழப்பதைத் தடுக்கலாம்.

இன்றைய சூழ்நிலையில், பலருக்கு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் தெரியாது. ஆனால், இன்றைய கால சூழ்நிலையில் நாம் அதைப்பற்றி தெரிந்து கொள்வது அவசியம்....

கீழ்கானும் அறிகுறிகள் மூலம் நாம் புற்றுநோயிலிருந்து விடுபடலாம்

1) மூச்சு விடுவதில் சிரமத்தை உணர்கிறீர்களா? அப்படியெனில் அதை சாதாரணமாக விடாதீர்கள். ஏனெனில் நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்கள் மூச்சு விடுவதில் சிரமத்தை உணர்வார்களாம்.

2) பலவகையான புற்றுநோய்களான இரத்த புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றிற்கு நாள்பட்ட இருமல் மற்றும் நெஞ்சு வலி ஆரம்ப கால அறிகுறிகளாகும். அதிலும் நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கு நெஞ்சு பகுதியில் வலி ஆரம்பித்து தோள்பட்டை வரை இருக்கும்.

3) இரத்த புற்றுநோய் இருந்தால், அடிக்கடி காய்ச்சல் வரக்கூடும். எனவே அடிக்கடி காரணமின்றி காய்ச்சல் வந்தால், உடனே மருத்துவரை அணுகி சோதித்துக் கொள்ளுங்கள்.

4) உணவு அல்லது நீர் விழுங்குவதில் சிரமத்தை உணர்ந்தால், தொண்டை அல்லது உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

5) நிணநீர் மண்டலத்தில் அடிக்கடி வீக்கங்கள் ஏற்பட்டால், அது புற்றுநோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

6) அளவுக்கு அதிகமான சோர்வு மற்றும் பலவீனம், பல வகையான புற்றுநோய்க்கு அறிகுறிகளாகும். அதுவும் எந்த ஒரு காரணமும் இல்லாமல், அளவுக்கு அதிகமாக தூக்க உணர்வைப் பெற்றாமல் உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

7) பெண்கள் வயிற்று உப்புசத்துடன், அடிவயிற்றில் தொப்பை வர ஆரம்பித்தால், உடனே மருத்துவரை அணுகி கருப்பை புற்றுநோய் உள்ளதா என்று சோதித்துக் கொள்ளுங்கள்.

8) எதுவும் சாப்பிடாமல் வயிறு நிறைந்திருப்பதை உணர்ந்தால், அதை சாதாரணமாக விடாதீர்கள். ஏனெனில் அது கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறியாகும்.

9) இடுப்பு அல்லது அடிவயிற்றுப் பகுதியில் வலி ஏற்பட்டு, வயிற்று உப்புசத்தை உணர்ந்தால், அதையும் சாதாணமாக நினைக்காதீர்கள். அதிலும் பல நாட்களால் இம்மாதிரியான உணர்வு இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

10) மலம் கழிக்கும் போது, அதில் இரத்தம் கலந்திருந்தால், அது மலக்குடல் புற்றுநோயாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருங்கள்.

11) காரணமின்றி உடல் எடை குறைகிறதா? அப்படியெனில் அது குடல் மற்றும் செரிமான மண்டல புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது.

12) வயிற்று பிடிப்புகள் அல்லது அடிக்கடி வயிறு அசௌகரியமாக இருந்தால், அது குடல் புற்றுநோய் இருப்பதற்கு வாய்ப்புள்ளதைக் குறிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago