முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீஞ்சூர்,சோழவரம்,திருவொற்றியூரைச் சேர்ந்த 687 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் உதவித்தொகைகள் : எம்.பி.வேணுகோபால்,எம்.எல்.ஏ.பலராமன் வழங்கினர்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      திருவள்ளூர்
Image Unavailable

திருவள்ளுர் மாவட்டம்,பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட சோழவரம்,மீஞ்சூர்,திருவொற்றியூர் பகுதிகளைச் சேர்ந்த 697 பயனாளிகளுக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட சமூக நலத்துறையால் வழங்கப்படும் திருமண உதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் மற்றும் உதவித்தொகைகள் வழங்கும் நிகழ்ச்சி மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது. மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் இயற்றப்பட்ட இத்திட்டத்தில் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான பயனாளிகளுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டது.சோழவரம் பகுதியில் 209 பயனாளிகள்,மீஞ்சூர் 184 பயனாளிகள்,திருவொற்றியூர் 294 பயனாளிகள் என மொத்தம் 687 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் உள்ளிட்ட உதவித்தொகைகள் வழங்கப்பட்டது. பயனாளிகளுக்கு திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.பி.வேணுகோபால்,பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் ஆகியோர் வழங்கினர்.உடன் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்[பொறுப்பு] ஜெயஸ்ரீ,மீஞ்சூர் ஒன்றிய சமூக நலத்துறை அலுவலர் சாவித்திரி,சோழவரம் ஒன்றிய சமூக நலத்துறை அலுவலர் பரிமளா மற்றும் முன்னாள் உள்ளாட்சி நிர்வாகிகள் மோகனவடிவேல்,பானுபிரசாத்,பட்டாபிராமன்,எம்.வி.சுந்தரம்,மேலூர்சிவலிங்கம்,காமராஜ், முத்துக்குமார்,திருமுருகன்,வாசு,காந்தி,தேவதானம் நாகராஜ் உள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்