முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன்னார்குடியில் அதிமுகவினர் பாட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      திருச்சி
Image Unavailable

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதை தொடர்ந்து அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மன்னார்குடியில் பல்வேறு இடங்களில் பட்டாசுள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

 

மன்னார்குடி பேருந்துநிலையத்தில் கூடிய 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து, பேருந்துகளில் சென்றவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

 

இதில் முன்னாள் எம்எல்ஏ ஞானசுந்தரம், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பொன்.வாசுகிராம், நகர செயலாளர் ஏ.டி.மாதவன், ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வம், திருவாரூர் மாவட்ட விவசாய அணி செயலாளர் கோவிந்தராஜன், தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் மனோகரன், தொகுதி கழக செயலாளர் எம்.கே.கலியபெருமாள், முன்னாள் நகர் மன்ற தலைவர் சுதாஅன்புச்செல்வன், அர்பன் வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்