முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்:கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரே தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்  திங்கள்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரே தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுதிறனாளிகளிடமிருந்தும், கூட்ட அரங்கில் பொதுமக்களிடமிருந்தும் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் உதவி, திருமண உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 487 மனுக்கள் பெறப்பட்டன. இதில் முதியோர் உதவித்தொகை கோரி அதிகளவில் மனுக்கள் குவிந்தன.பொதுமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் வழங்கி, மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்திரவிட்டார். மேலும், நிலுவையிலுள்ள மனுக்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்