முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்கு சிறப்புப்பரிசு:கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (09.01.2017) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம்  தலைமையேற்று பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை வேண்டியும், குடிசை மாற்று வாரியத்தில் வீடு வேண்டியும்,  புதிய குடும்ப அட்;டைகள் வேண்டியும், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மொத்தம் 329 மனுக்கள் வரப்பெற்றன.இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் எதிர்பாரதவிதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் மரணமடைந்த 1 நபரின் குடும்பத்தாருக்கு நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் சார்பில் ரூ.1.00 இலட்சமும், 2 நபர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.50,000 வீதமும்,  நபரின் குடும்பத்தாருக்கு ரூ.30,000மும் என மொத்தம் 4 நபர்களின் குடும்பத்தாருக்கு ரூ.2.30 இலட்சம் விபத்து நிவாரண நிதியுதவிக்கான காசோலைகளையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பாடப்பிரிவுகளில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த 4 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச்சான்றுதழ்களுடன் மொத்தம் ரூ.10,000 சிறப்புப் பரிசுக்கான காசோலைகளையும் கலெக்டர் மு.ஆசியா மரியம்  வழங்கினார்.மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5மாற்றுத்திறனாளிக்கு தலா ரூ.5,800 வீதம் ரூ.29,000 மதிப்பிலான சக்கர நாற்காலிகளையும், 39 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டைகளையும் என மொத்தம் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 52 பயனாளிகளுக்கு ரூ.2,69,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம்  வழங்கினார்.இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) நா.பாலச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கே.எஸ்.முரளிகிருஷ்ணன், உதவி ஆணையர் (கலால்) புகழேந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்