முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுதுகள் இளைஞர் மன்றத்தின் சார்பில்

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      தேனி
Image Unavailable

தேனி   

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் அரசு மேல்நிலை பள்ளியில் விழுதுகள்  இளைஞர் மன்றம் மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில்  ரொக்கமில்லா வர்த்தகம் மற்றும் பரிவர்த்தனை குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு நேரு யுவகேந்திரா இளையோர் மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரமகாலிங்கம் தலைமை தாங்கினார். இக்கருத்தரங்கில் தாமரைக்குளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் இந்துமதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரொக்கமில்லா பரிவர்த்தனை மற்றும் வர்த்தகம் குறித்து சிறப்புரையாற்றினார்.  தூய்மை இந்தியா குறித்து பேரூராட்சி அலுவலர் ராஜேந்திரன், சுற்றுப்புறசூழல் குறித்து அரிமா சங்கதலைவர் நௌஷாத் கருத்துரை வழங்கினர். மேலும் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இக்கருத்தரங்கில் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை ஆண்டிபட்டி பாண்டி மேற்பார்வையில் விழுதுகள் இளைஞர் மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்