முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், தலைமையில் மதுரை மாவட்டத்தில் குடியரசு தின விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் -

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      மதுரை
Image Unavailable

மதுரை-  மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில், குடியரசு தின விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (11.01.2017) நடைபெற்றது.
 வருகின்ற 26.01.2017 அன்று குடியரசு தின விழாவை முன்னிட்டு, மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு, சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்து, பல்வேறு அரசு நலத்

திட்ட உதவிகளை வழங்கி, சிறப்பாக பணிபுரிந்த அரசு மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கவுள்ளார்கள். 
 இக்கூட்டத்தில் குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்தும், பாதுகாப்பு, போக்குவரத்து, சுகாதார வசதி, குடிநீர் வசதி மற்றும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.


 இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரி,இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் கூ.வேலுச்சாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆறுமுக நயினார், வருவாய் கோட்டாட்சியர்கள் செந்தில்குமாரி(மதுரை), பெனடிக்ட் தர்மராய்(மேலூர்), சுகன்யா(உசிலம்பட்டி), துணை இயக்குநர் (கனிமம்) எம்.சிற்றரசு , துணை ஆணையர் (ஆயுதப்படை) சி.ஈஸ்வரன் உட்பட அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்