முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருட்களை சாத்தூர் எம்.எல்.ஏ சுப்பிரமணியன் வழங்கினார்.

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      விருதுநகர்
Image Unavailable

  ராஜபாளையம், ராஜபாளையம் அருகே சமுசிகாபுரத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசில் விலையில்லா பொங்கல் பொருட்கள் விநியோகம்.எம்.எல்.ஏ.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினார்.

 ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் உள்ள சமுசிகாபுரம்  நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பொங்கல் பொருட்கள், வேட்டி மற்றும் சேலை  ஆகியவற்றை எம்.எல்.ஏ.சுப்பிரமணியன் கலந்து கொண்டு வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் குடிமை பொருட்கள் வட்டாட்சியர் அன்னம்மாள், முன்னாள் ஒன்றியத்துணைத்தலைவர் குட்டி, கிழக்கு ஒன்றியச் செயலாளர் வேல்முருகன், சாத்தூர் ஒன்றிய நிறுவாகிகள் ராமராஸ், போஸ், முன்னாள் கவுன்சிலர் தங்கராஸ், ராமலிங்காபுரம் பரமசிவம்; மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 1700குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டன.

பொருட்களை வழங்கிய பின் எம்.எல்.ஏ. சுப்பிரமணியன் கூறியதாவது: ஏழை, எளிய மக்கள் பயன்பெரும் வகையில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் சிறப்பு திட்டத்தில் ஒன்றான இந்த பொங்கல் பரிசு திட்டம் ஒவ்வொரு ஆண்டும் நியாயவிலைக்கடையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது.அதே போன்று இந்தாண்டும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படும்; இவ்வாறு பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்