எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி : மனிதர்களைப் போன்று ''பொய்முகம்'' காட்டும் குணம் பகவானிடம் இல்லை என்று ஆழ்வார்திருநகரியில் நடைபெற்ற திருப்பாவை உபன்யாசத்தின்போது வேளுக்குடி கிருஷ்ணர் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருகரியில் நவதிருப்பதிகளில் கடைசி ஸ்தலமான ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு பெருமாள் ஆதிநாதர் ஆழ்வாராக ஆதிநாயகி, குருகூர் நாயகியுடன் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவிலில் மார்கழி அத்யனத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி இந்தாண்டிற்கான மார்கழி அத்யனத் திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிறப்பாக பராங்குசன் சாரிட்டபுள் டிரஸ்ட் சார்பில் நாள்தோறும் கோவிலில் ஆன்மிக சிறப்புபெற்ற உபன்யாசர் வேளுக்குடி கிருஷ்ணின் திருப்பாவை உபன்யாசம் நடைபெற்று வருகிறது. 16ம் திருப்பாவை உபன்யாசத்தின்போது வேளுக்குடி கிருஷ்ணன் பேசியதாவது,
பக்தி யோகத்தால் மட்டுமே இறைவனை நாம் அடைய முடியும். கடவுள் மீது பக்தி செலுத்துவது வாழ்வில் இனிமையானதாகும்.மனிதர்களாகிய நமக்குத்தான் எத்தனை எத்தனையோ முகங்கள் இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொருவிதமான முகம் என்று அர்த்தமில்லை. ஒவ்வொரு மனிதரும், ஒவ்வொரு மனிதரிடத்திலும் ஒவ்வொரு சூழலிலும் அந்த சூழ்நிலைக்கேற்ப எத்தனை எத்தனையோ விதமான முகங்களை கொண்டே செயல்படுகிறோம் என்பது இயல்பானது தான்.
பொதுவாக வீட்டில் ஒரு முகத்துடனும், அலுவலகத்தில் ஒரு முகத்துடனும் இருக்கிறோம். வீடு, அலுவலகம் இரண்டினையும் தவிர்த்து வெளிவுலகினை பார்க்கும்போது பொதுஇடத்தில் வேறொரு முகத்துடன் இருப்பதும் உண்டு. இப்படி நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்வில் எத்தனை எத்தனையோ முகங்களை வைத்துக்கொண்டு திரிகிறோம்.
வீடு, அலுவலகம், பொதுஇடம், நண்பர்கள், உறவினர்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான பொய்முகத்தினை கொண்டு வாழ்கிறோம். இப்படிப் பொய்முகங்களை கொண்டு வாழ்கிற மனிதர்கள் இவ்வுலகில் நிறையவே உண்டு. இதேநேரத்தில் சிலர் மனிதர்களைப்போன்று தானே பகவானும் பல்வேறு முகங்களை கொண்டு இருப்பார் என்றுகூட சிலர் கேட்கலாம். இந்தகேள்வி இயல்பானது தான்.
அதற்காக இதனை பொய் என்று சொல்லிவிட முடியாது. நாம் தினமும் வணங்கும் பகவானுக்கும் பலமுகங்கள் இருப்பது உண்மையானது தான். பெருமாளுக்கு திருமுகங்கள் பல உண்டு. ஒருமுகத்தை நமக்கு காட்டி அருளும்போது, மற்ற எல்லாமுகங்களையும் பெருமாள் மறைத்துக்கொள்கிறார்.
பெருமாள் இவ்வுலக பயன்பாட்டுக்காகவும், நம்மைப்போன்ற அடியவர்களுக்கு அருள்வதற்காகவும் பலமுகங்களுடன் பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளார். பகவான் பெருமாள் விருப்பு&வெறுப்புகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். அவருக்கு நம்மைப்போன்று இன்ப, துன்பங்கள் எல்லாம் இல்லை. இங்கே குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் ''மனிதர்களைப் போன்று பொய்முகம் காட்டுகிற குணம் எம்பெருமான் பகவானிடம் இல்லவே இல்லை''. ஏனென்றால் இவ்வுலகினையே உய்வித்ததோடு மட்டுமல்லாமல் நம்மையெல்லாம் காக்கும் நாயகனே அவர்தான்.
இதுபோன்று தான் 'தேவை' என்பது நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் வேறுபட்டு இருக்கிறது. உங்களுக்கு தேவையானது என்று நீங்கள் நினைப்பது எனக்கு தேவையில்லாததாக இருக்கலாம். இதுபோன்று நான் எனக்கு தேவையில்லை என்று நினைப்பது உங்களுக்கு மிகமிக அவசியமானதாகவும், முக்கியத்தேவையானதாகவும் இருக்கலாம். எது எப்படியாயினும், உலகின் அனைத்துமனிதர்களும் தம் அன்றாடவாழ்வில், தேவை என்று ஒவ்வொரு விஷயத்தை நினைக்கின்றனர். அந்த விஷயம் குறித்து குழம்புகின்றனர். அதற்குத்தீர்வு எங்கே கிடைக்கும் என்றும் தேடி அலைகின்றனர். அப்படி ஒரு விஷயத்தைத் தேடினால்,
அதற்கு உண்டான அர்த்தத்தை அறியவேண்டும் என்று விரும்பினால், அவை அனைத்தும் எங்கே கிடைக்கும் தெரியுமா? மகாபாரதத்தில் நிச்சயமாக கிடைக்கும்.
நமக்கான மிகப்பெரிய வித்தும், சத்தும் அதில்தான் நிரம்பி இருக்கிறது. ''மகாபாரதம்'' நம் தேசத்துக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரியசொத்து. இறைவன் தானே விரும்பி நமக்குத் தந்திருக்கிற அருட்கொடை தான் மகாபாரதம். மகாபாரதத்தில் ஒரு விஷயம் இல்லையெனில், அதனை வேறுஎங்கே தேடினாலும் கிடைக்காது என்பதை நீங்கள் முதலில் தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள். இப்படிப்பட்ட அற்புதமான மகாபாரதத்தைத் தந்தருளியதால், பகவான் ஸ்ரீகிருஷ்ணரை நாயகன் என்று போற்றிக் கொண்டாடுகிறோம்.
ராமாயணம், சீதையின் வைபவத்தை அழகுற நமக்கு தந்தருளியது என்றால், மகாபாரதம் ஸ்ரீகிருஷ்ண வைபவத்தை முழுவதுமாகப் பறைசாற்றுகிறது. ஸ்ரீராமரைப் போல் நாமும் வாழவேண்டும் என்பதே ராமாயணத்தின் சாராம்சம். ஸ்ரீராமரை முன்மாதிரியாக, ரோல்மாடலாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதே ஸ்ரீராம சரிதையின் நோக்கம். அப்படியெனில், ஸ்ரீகிருஷ்ணரைப்போல் வாழவேண்டும் என்பதைச் சொல்கிறதா? மகாபாரதம் என்று எவரேனும் குதர்க்கமாக யோசிக்கலாம்.
ஸ்ரீகண்ணன் வெண்ணையைத் திருடினான், மண்ணைத் தின்றான், ஏகத்துக்கும் பொய்கள் சொன்னான், பதினாறாயிரம் ஸ்திரீகளைக் கொண்டிருந்தான். அதற்காக, ஸ்ரீகிருஷ்ணரை முன்மாதிரியாகக் கொண்டு நாமும் அப்படியிருக்கலாமே என்று நினைப்பது மிகப்பெரும் தவறு. அப்படி நினைத்தால் நமது சிந்தனையில் மிகப்பெரும் பிழை இருப்பதாகத்தான் அர்த்தம்.
ஒட்டுமொத்த வாழ்வியல் தத்துவங்களைச் சொல்கிற உபதேசம் அடங்கிய மகாபாரதத்தில், அர்ஜுனனுக்கு சொல்வதுபோல அகில உலகமக்களுக்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அருளிய உபதேசங்களை மனத்துள் இறக்கி, அதன்படி வாழவேண்டும் என்பதே மகாபாரதத்தின் முக்கிய நோக்கம். ஒவ்வொரு மனிதனும் அந்த உபதேசங்களைச் செயல்படுத்தி, செம்மையாக வாழவேண்டும் எனநினைத்தாலே, நம்தேசம் இன்னும் வளமாகிவிடும்.
அப்பேர்ப்பட்ட வாழ்க்கைத் தத்துவங்களை நமக்கு தந்துள்ள கீதையை அருளிய ஸ்ரீகண்ண பரமாத்மா தான் உலகுக்கெல்லாம் நாயகனாக இருக்கிறார். அதனால்தான் அவனுக்கு ‘நாயகன்’ என்று திருநாமம் அமைந்தது. பரந்துபட்ட உலகை வழிநடத்துபவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். அவரே நாயகர் எனும்போது நாயகி? பிராட்டி ஸ்ரீருக்மிணிதேவி ஆவார்.
ஒருவீட்டுக்கு நாயகனாகவும் நாயகியாகவும் இருப்பது பெற்றோர். எனவே, அவர்களின் செயல்பாடுகளை அறிந்து, அவர்கள் சொல்கிற விஷயங்களின்படி வாழ்வில் நடப்பதே முக்கியம். குழந்தைகளின் முதல் ரோல்மாடலாக இருக்கிற பெற்றோர் சரியாக நடந்தால்தான், பொய்யும் புரட்டுமின்றி வாழ்ந்தால்தான், குழந்தைகளும் அவற்றைப் பார்த்தும், பின்பற்றியும் அதன்படியே நடக்கும். அதனால்தான் தந்தையை ''குடும்பத்தலைவன்'' என்றும், தாயை ''குடும்பத்தலைவி'' என்றும் சொல்கிறோம். இதேநேரத்தில் நமக்கெல்லாம் தலைவனாக பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவும், நாயகியாக ஸ்ரீருக்மிணி பிராட்டியாரும் உள்ளனர்.
இந்திரியம் எனும் குதிரையை நம்மால் அடக்கமுடியாது. அதை அடக்கியாள்வதற்கு மனம் என்கிற கடிவாளம் தேவையாக இருக்கிறது. அந்த மனத்தில் இறைவனை நினைத்து அமர்த்திக்கொண்டு விட்டால், மனத்தை அப்படியே இறைவனிடம் ஒப்படைத்துவிட்டால், கடிவாளம் போட்டு இந்திரியங்களை அடக்கி, நம்மை நிம்மதியுடனும் அமைதியுடனும் இனிதே வாழச் செய்வான் நாயகன் ஸ்ரீகிருஷ்ணன்.
எனவே, மனதை கடவுளான பகவான் பக்கம் திருப்புங்கள். மொத்த மனதையும் அவனிடம் ஒப்படைத்துவிடுங்கள். அதற்குப் பெயர்தான் சரணாகதி. கடவுளிடம் சரணடைதல் என்பது இவ்வாழ்வில் உயர்வான விஷயத்துடன், உத்தமமான காரியமாகும். அப்படி இறைவனிடம் தம்மை ஒப்புக்கொடுக்கிறவர்களே, சரணடைபவர்களே வாழ்வில் பாக்கியவான்கள். இதற்கேற்ப நாமும் வாழ்வில் பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் பக்தியால் சரண் அடைந்து வாழ்வில் ஆனந்தம் கண்டு பேரானந்தம் பெற்று என்றும் எப்போதும் மகிழ்வோடு வாழ்ந்திடுவோம் என்றார்.
இந்த உபன்யாச நிகழ்வில், எம்பெருமானார் ஜீயர் சுவாமி, ஆத்தான் மேலத்திருமாளிகை அப்பு சடகோபாச்சாரியார், கீழத்திருமாளிகை ராமானுஜ சுவாமி, முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் பக்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். திருப்பாவை உபன்யாசம் தினந்தோறும் காலை 7.30மணி முதல் காலை 9.30மணி வரை என தொடர்ந்து வரும் ஜனவரி 13ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பராங்குசன் சேரிட்டபுள் டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.