முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர்,சிதம்பரம்.விருத்தாச்சலம் கோட்டங்களுக்கு உட்பட்ட 2210 பயனாளிகளுக்கு ரூ.2,47,00,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      கடலூர்

கடலூர்,

 

கடலூர் மாவட்டத்தில் 2016-17-ம் நிதியாண்டில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2240 பயனாளிகளுக்கு ரூ.1,88,72,000- மதிப்பிலான திருமண உதவித்தொகையும், 4127 பயனாளிகளுக்கு ரூ.5,14,47,500- மதிப்பிலான இயற்கை இறப்பு நிவாரணத்தொகையும் என 6367 பயனாளிகளுக்கு ரூ.7,03,19,500- மதிப்பிலான உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது. இதேபோல் 2016-17-ம் நிதியாண்டில் பள்ளிக்கல்வித்துறை மூலம் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 24675 பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரூ.8,82,25,440- மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.

 

தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலெக்டர் டி.பி.ராஜேஷ், முன்னிலையில் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கடலூர், சிதம்பரம் மற்றும் விருத்தாச்சலம் கோட்டங்களுக்குட்பட்ட 2126 பயனாளிகளுக்கு ரூ.2,43,41,500- மதிப்பிலான திருமண உதவித்தொகை மற்றும் இயற்கை இறப்பு நிவாரணத்தொகையை வழங்கினார்.

 

தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலெக்டர் டி.பி.ராஜேஷ், முன்னிலையில் கடலூர் கலெக்டர் பொதுமக்கள் குறைதீர் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கடலூர் கோட்டத்திற்கு உட்பட்ட 1003 பயனாளிகளுக்கு ரூ.1,13,91,000- மதிப்பிலான திருமண உதவித்தொகை மற்றும் இயற்கை இறப்பு நிவாரணத்தொகைகளையும், விருத்தாச்சலம் கோட்டத்திற்கு உட்பட்ட 807 பயனாளிகளுக்கு ரூ.95,19,500- மதிப்பிலான திருமண உதவித்தொகை மற்றும் இயற்கை இறப்பு நிவாரணத்தொகைகளையும் என ஆகமொத்தம் 1810 பயனாளிகளுக்கு ரூ.2,09,10,500- மதிப்பிலான திருமண உதவித்தொகை மற்றும் இயற்கை இறப்பு நிவாரணத்தொகைகளையும் வழங்கினார். மேலும், தொழில்துறை அமைச்சர் பள்ளிக்கல்வித்துறை மூலம் 20 பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரூ.71,500- மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளையும், மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் 20 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.12,000- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.47,500- மதிப்பிலான இலவச சலவைப்பெட்டிகளையும் வழங்கினார். ஆகமொத்தம் 1863 பயனாளிகளுக்கு ரூ.2,10,41,500- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

இதனைத் தொடர்ந்து சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தொழில்துறை அமைச்சர் கலெக்டர் முன்னிலையில் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிதம்பரம் கோட்டத்திற்கு உட்பட்ட 126 பயனாளிகளுக்கு ரூ.11,46,000- மதிப்பிலான திருமண உதவித்தொகையும், 190 பயனாளிகளுக்கு ரூ.23,75,000- மதிப்பிலான இயற்கை இறப்பு நிவாரணத் தொகைகளையும் வழங்கினார். மேலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 6 பயனாளிகளுக்கு ரூ.24,000- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 25 பயனாளிகளுக்கு ரூ.1,14,000- மதிப்பிலான விலையில்லா சலவைப்பெட்டிகளையும் என ஆகமொத்தம் 347 பயனாளிகளுக்கு ரூ.36,59,000- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

ஆகமொத்தம் தொழில்துறை அமைச்சர் இன்று 2210 பயனாளிகளுக்கு ரூ.2,47,00,500- (ரூபாய் இரண்டு கோடியே நாற்பத்து ஏழு லட்சத்து ஐநூறு மட்டும்) மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சிதம்பரத்தில் நடைபெற்ற விழாவில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்கள்.

 

மேற்கண்ட இடங்களில் நடைபெற்ற விழாவில் கலெக்டர் தலைமையுரையின்போது தெரிவித்ததாவது,

 

தமிழக அரசு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிராமப் புறங்களில் வாழும் மக்கள், ஏழை எளிய மக்கள், பெண்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினார் போன்றோர்களுக்கு தமிழகத்தில் மட்டும்தான் பல்வேறு நலத்திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வருவாய்த்துறை மூலம் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் கல்வி, தரமான கல்வி வழங்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதிதான் இந்த விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டமாகும். இன்று தொழில்துறை அமைச்சர் அவர்களால் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளும் வழங்கப்படுகிறது. பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசால் பொங்கல் பரிசு தொகுப்பும், இலவச வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப்;பெற்று பொங்கல் திருநாளை நீங்கள் சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்.

 

மேற்கண்ட இடங்களில் நடைபெற்ற விழாக்களில் தொழில்துறை அமைச்சர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தெரிவித்ததாவது,

 

முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா தொடங்கிய உழவர் பாதுகாப்புத்திட்டம் 14 அம்சங்களை உள்ளடக்கிய திட்டமாகும். ஆண், பெண்ணுக்கு திருமண உதவித்தொகை, இயற்கையாக மரணமடைந்தால் ரூ.10000- ஈமச்சடங்கு செலவு செய்ய ரூ.2500-, முதியோர் ஓய்வூதியம், காசநோய், தொற்றுநோய், விபத்தின் மூலம் இறப்பு, இரண்டு கைகள் மற்றும் கால்கள் இழப்பு போன்றவற்றிற்கு நிவாரணத்தொகை வழங்கும் பல்வேறு அம்சங்களை கொண்ட உன்னதமான திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் இன்றைய தினம் கடலூர், சிதம்பரம் மற்றும் விருத்தாச்சலம் கோட்டத்திற்கு உட்பட்ட 2126 பயனாளிகளுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.2,43,41,500- மதிப்பீட்டில் திருமண உதவித்தொகை, இயற்கை இறப்பு நிவாரணத்தொகை வழங்கப்படுகின்றது. நமது மாவட்டத்தை பொறுத்தவரை முதியோர் உதவித்தொகை ரூ.132 கோடி திட்ட மதிப்பீட்டில் நமது மாவட்டத்தில் அனைத்து முதியோர்களுக்கும் வழங்கப்படுகின்றது. முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. உழவர் பெருங்குடி மக்களின் நலனை காக்கும் வகையில் தமிழ்நாடு மாநிலத்தை வறட்சி மாநிலமாக அறிவித்துள்ளது. வறட்சியால் பல்வேறு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உதவி இல்லாமல் வறட்சி நிவாரணங்களுக்கு முதற்கட்டமாக நிவாணரங்களை அறிவித்துள்ள அரசு இந்த அரசு என்பதை பெருமையோடு செல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களால் விலையில்லா மதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2003-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்டமாகும். கிட்டதட்ட 14 ஆண்டுகளாக பதினொராம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு முடித்தபிறகு மாணவ மாணவிகளுக்கு கல்வி தடைபடாமல் இருக்கவும், உந்து சக்தியாக திகழும் வகையிலும் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழக அளவில் ரூ.240 கோடி திட்ட மதிப்பீட்டில் 6 லட்சத்திற்கு மேற்பட்ட விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. நமது மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதினொராம் வகுப்பு படிக்கும் 24675 மாணவ மாணவிகளுக்கு ரூ.8.82 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றது. இன்றைய தினம் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை ரூ.15,86,04,440- உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு அம்சங்களுக்கு வழங்கப்படுகிறது. பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்பும், விலையில்லா வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகைகள் பெறும் பயனாளிகள் அனைவரும் பொருப்பாக இந்த பணத்தை பெற்றுக்கொண்டு உபயோகமான காரணத்திற்கு நீங்கள் செலவிட வேண்டும் என்ற அன்பான வேண்டுகோலினை வைத்துக்கொள்கின்றேன். இந்த உதவித்தொகைகளை பெற்று நீங்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழவேண்டும் என வாழ்த்தி; பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சிகளில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் செல்வி ராமஜெயம், கலைமணி, மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, கடலூர் சார் ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் பி.ரவிச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோவிந்தன், சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் விஜயலட்சுமி, வட்டாட்சியர்கள், முன்னாள் நகர் மன்றத் தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்