முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலையணிவித்து மரியாதை:

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம். மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கண்டுகுளம் கிராமத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலைக்கு அ.தி.மு.க நிர்வாகிகள் மாலையணிவித்து மரியாதை செலுத்தியதுடன் பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கி கொண்டாடினார்கள்.

அ.தி.மு.க நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதிலும் அ.தி.மு.க.வினர் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.இதன் ஒருபகுதியாக திருமங்கலம் அருகேயுள்ள கண்டுகுளம் கிராமத்தில் தமிழகத்திலே முதல் முறையாக அமைக்கப்பட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலைக்கு திருமங்கலம் தொகுதி அ.தி.மு.க சார்பில் மாலையணிவித்து மரியாதை செலுத்திடும் நிகழ்ச்சி நேற்று காலை வெகுசிறப்பாக நடைபெற்றது.தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள்,கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டுகுளத்தில் உள்ள புரட்சித்தலைவர் அமரர்.எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.பின்னர் எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலைக்கு முன்பாக திரண்டிருந்த அனைவருக்கும் சர்க்கரை பொங்கலை அ.தி.மு.க.வினர் வழங்கி கொண்டாடினார்கள்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மதுரை புறநகர் மாவட்ட கழகச்செயலாளர் எம்.ஜெயராமன், திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல்.அன்பழகன்,முன்னாள் திருமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் சேர்மன்,ஒன்றிய அம்மா பேரவை தலைவர் சாத்தங்குடி தமிழழகன்,திருமங்கலம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் ஆண்டிச்சாமி,ஒன்றிய அவைத்தலைவர் அன்னக்கொடி,முன்னாள் ஒன்றிய செயலாளர் பாண்டியன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம்,சிவஜோதிதர்மர்,தீபாஆறுமுகம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் பரமசிவம்,சாமிநாதன்,கட்சி நிர்வாகிகள் வேல்முருகன்,முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்