எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார். ராமநாதபுரம் புனித அந்திரேயா மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக நடைபெற்ற விழாவில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன், மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் நகரத்தில் உள்ள 6 பள்ளிகளைச் சார்ந்த மொத்தம் 2,415 மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அன்வர்ராஜா முன்னிலை வகித்தார். இவ்விழாவில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது :- மண்ணில் மறைந்தாலும் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர்.ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள் வாழ்க்கையில் ஏற்றம் பெறும் விதமாக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை வழங்கியுள்ளார்கள்.
அந்தவகையில் மாணவ, மாணவியர்களின் கல்வி வளர்ச்சி தான் சமுதாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் மாணவ,மாணவியர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தினை ஊக்குவித்திடும் வகையில் பள்ளிக்கல்வித் துறையின் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள், விலையில்லா மிதிவண்டிகள், விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா நோட்டுப்புத்தகங்கள், விலையில்லா சீருடை, விலையில்லா பயணப் பேருந்து பயண அட்டை உட்பட 14 வகையான மாணவர் நலன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்அமைச்சரின் சிறப்பு திட்டமான மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் மொத்தம் 6லட்சத்து 35ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன. அவற்றில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 6ஆயிரத்து 266 மாணவர்கள், 7ஆயிரத்து 445 மாணவியர்கள் என மொத்தம் 13ஆயிரத்து 711 மாணவ, மாணவியர்கள் விலையில்லா மிதிவண்டிகள் பெற்று பயன்பெறவுள்ளனர். அதனடிப்படையில் இன்று நடைபெறும் இவ்விழாவில் முதற்கட்டமாக ராமநாதபுரம் நகரில் உள்ள ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 164 மாணவ, மாணவியர்கள், ராஜா மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 164 மாணவ, மாணவியர்கள், செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 1530 மாணவ, மாணவியர்கள், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 166 மாணவியர்கள், புனித அந்திரேயா மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 275 மாணவியர்கள், டிடி விநாயகர் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 116 மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 2,415 மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் மொத்தம் 5லட்சத்து 35ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளன.
தகவல் தொழில்நுட்பத்துறையின் மூலம் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தமிழ்நாடு அரசு ரூ.4ஆயிரம் கோடி திட்ட மதிப்பீட்டில் மாணவ, மாணவியர்கள் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆக்கப்பூர்வமான கல்வியினை பெற்று அறிவியல் துறை உட்பட அனைத்து துறைகளிலும் தலைசிறந்து விளங்கிட ஏதுவாக திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. தமிழ்நாடு அரசு மாணவ, மாணவியர்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் இதுபோன்ற எண்ணற்ற மாணவர் நல திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்தி, பள்ளிப்பருவத்தில் தங்களது கவனங்களை சிதற விடாமல் நல்லொழுக்கத்துடன் கல்வி கற்று, சக மனிதர்களிடத்தில் அன்பு பாராட்டி, கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று சமுதாயத்தில் உயர்ந்த நிலையினை அடைந்திட வேண்டும். இவ்வாறு பேசினார். இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 185 உயர்நிலை- மேல்நிலைப் பள்ளிகளும், ஆயிரத்து 515 தொடக்க- நடுநிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. 2016-2017-ஆம் கல்வியாண்டில் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை-மேல்நிலைப் பள்ளிகளில் 43ஆயிரத்து 262 மாணவர்கள், 46,300 மாணவிகள் என மொத்தம் 89,562 மாணவ, மாணவிகளும், தொடக்க - நடுநிலைப் பள்ளிகளில் 33,145 மாணவர்களும், 33,782 மாணவிகள் என மொத்தம் 66,927 மாணவ, மாணவிகளும் கல்வி பயின்று வருகின்றனர். 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அர
சு பொதுத் தேர்வில் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் 97.1 ஆகும். இது மாநில அளவில் நான்காம் இடமாகும். மேலும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதம் 95.04 ஆகும். இது மாநில அளவில் ஒன்பதாவது இடமாகும். தமிழ்நாடு அரசு மாணவர் நலனுக்காக செயல்படுத்தி வரும் அனைத்து மாணவர் நல திட்டங்களும் மாணவ, மாணவியர்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு பேசினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக 25 கிராம அளவிலான வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளுக்கான காசோலைகளை வழங்கினார். இவ்விழாவில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.எஸ்.முத்தையா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.ஜெயக்கண்ணு, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் வி.ஜெயராமன், புனித அந்திரேயா மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் மனோகர் மார்டின் உள்பட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.